நாமக்கல், ஜூன் 21- நீர்வழிப்பாதை ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித் தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர் தாமரையிடம், அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, பள்ளிபாளை யம் நகராட்சிக்குட்பட்ட குட்டை முக்கு என்ற பகுதி அருகே நீர்வழிப்பாதையை ஒரு சில தனிநபர்கள் ஆக் கிரமித்துள்ளனர். இதனால் நீர்வழிப்பாதை அடைக்கப் பட்டு, அந்த பகுதியில் வணிக நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு, ஆக் கிரமிப்பு செய்யப்பட்டுள் ளது. எனவே, நகராட்சி நிர்வா கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்த நபர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் நீர்வழிப்பாதையை மீட்டு தர வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளது.