கொடநாடு கொலை வழக்கு அதிமுக நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கோவை, ஏப்.26- கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக அதிமுக நிர் வாகி சஜீவனிடம் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதல் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடை பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக நிர்வாகியும், தனியார் பர்னிச்சர் கடை உரிமை யாளருமான சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கொடநாடு எஸ்டேட் கொள்ளைக்கு பங்களாவில் உள்ள லாக்கரை திறக்க ஏதேனும் உதவியுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்தில் லாரி எரிந்து சேதம்
பொள்ளாச்சி, ஏப்.26- கோவை மாவட்டம், ஆனைமலை அருகே அய்யாமடை பிரிவு பகுதியில் அறு வடை இயந்திரத்தை ஏற்றி வந்த லாரி திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தக வல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள் ளாச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். இதுகுறித்து ஆனைமலை காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
லாரி கவிழ்ந்து விபத்து
ஈரோடு, ஏப்.26- ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர், சத்தியமங்கலத்தில் இருந்து விறகு பாரம் ஏற்றிக் கொண்டு, ஈரோடு கனிரா வுத்தர்குளம் பகுதியில் செயல்படும் தனியார் மில்லிற்கு லாரியை ஓட்டி வந்தார். ஈரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள வளை வில் லாரியை ஓட்டுநர் கோவிந்தராஜ் திருப்ப முயன்றார். அப்போது, பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் விற குகள் சாலையில் சிதறிய தால் அந்த பகுதியில் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிகள் அருகில் போதை பொருள் விற்பனையா? காவல் துறையினர் தீவிர ரோந்து
திருப்பூர், ஏப்.26- திருப்பூரில் அரசு பள்ளிகளுக்கு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடை பெறுகிறுதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடி மையாவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு அருகா மையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடை பெறுவதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறையினர் திருப்பூர் ராயபுரம் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ள கடை களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை நடை பெறுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.
சோயா புண்ணாக்கு விலையை கட்டுக்குள் கொண்டு வர கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
உடுமலை, ஏப்.26- சோயா புண்ணாக்கு விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பண்ணைகள் வாயிலாக வாரம் 2 கோடி கிலோ கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. கோழிகளின் பிரதான தீவனமாக சோயா புண்ணாக்கு, மக் காச்சோளம் உள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிர தேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சோயா புண்ணாக்கு தமிழகத்துக்கு வருகிறது. மாதத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் சோயா புண்ணாக்கு கறிக்கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டில், இருமடங்கு சோயா புண்ணாக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2019 இல் கிலோ 39 ரூபாயாகவும், 2020 இல் 40 ரூபாயாகவும் இருந்த சோயா புண்ணாக்கு, 2021-22 இல் 68 ரூபாயாக உள்ளது. 3 ஆண்டில் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது. மக்காச்சோளம், தமிழகத்திலும் உற்பத்தியாவதால், பெரிய அளவில் விலை உயரவில்லை. சோயா புண்ணாக்கு விலை கட்டுக்குள் கொண்டு வரவும், விவசாயிகளிடையே உற்பத்தியை ஊக்குவிக்கவும் தமிழக வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரக வாழ்வாதார திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
உடுமலை, ஏப்.26- மத்திய குடும்ப நல மற்றும் நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் சித்திக்கர் தலை மையிலான அதிகாரிகள் குழுவினர் செவ் வாயன்று உடுமலை அரசு மருத்துவமனை யில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் தேசிய சுகாதார திட்டத் தில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை கருவிகள், உடல் பரிசோதனை கருவிகளும், படுக்கை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து, டெல்லியில் உள்ள குடும்ப நல மற்றும் நல்வாழ்வுத்துறையினர், அவ்வப் போது ஆய்வு நடத்தி உறுதியும் செய்கின்ற னர். அவ்வகையில் மத்திய குடும்ப நல மற்றும் நல்வாழ்வுத்துறை இணைச் செயலா ளர் சித்திக்கர் தலைமையிலான அதிகாரி கள் குழுவினர், உடுமலை அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் ‘சீமாங்’ பிரிவில் வாங்கப்பட்டுள்ள கருவிகள், வசதி கள் குறித்து கேட்டறிந்தனர். இதில், மருத்து வப் பணிகள் இணை இயக்குனர் பிரேம லதா, தலைமை மருத்துவர் உமாமகேஸ் வரி, ‘சீமாங்’ பிரிவு மருத்துவர் (பொறுப்பு) ரோஷன்சுலைகாபர்வீன் உட்பட பலர் உடனி ருந்தனர்.
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வரி செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தல்
தாராபுரம், ஏப்.26- சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி வரி செலுத்துவோர் சங்கத்தி னர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, தாராபுரம் நகர்மன்றத் தலைவர் கு.பாப்புகண்ணனிடம், வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் பழனி சாமி, செயலாளர் வெள்ளைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறி யுள்ளதாவது, தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி மற் றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இதன்படி நகராட்சி, பேரூ ராட்சிகளில் 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவிலான குடியிருப்பு கட்டடங்க ளுக்கு 25 சதவீதமும், 610 முதல் 1200 சதுர அடி வரையில் உள்ள கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை யில் உள்ள கட்டடங்களுக்கு 75 சதவீதமும், வரியை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டு கட்டடங் களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை கல்வி நிறுவன கட்டடங்களுக்கு 75 சதவீத மும் உயர்த்தப்பட உள்ளது. தாராபுரத்தில் தொழில் துறையும், வணிகத்துறையும் மிக வும் பின் தங்கியுள்ளதுடன், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதியாக உள்ளது. ஆகவே, உயர்த்தப்பட்ட வரியை குறைத்து ஒரே சீரான வரி நிர்ணயம் செய்ய வேண் டும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நூலக சுற்றுச்சுவரையொட்டி டிரான்ஸ்பார்மர் அமைப்பதை தவிக்க கோரிக்கை
உடுமலை, ஏப்.26- உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2-ல் போட்டித் தேர்வுகள் மற்றும் வாசகர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த நூலகத்தை தினசரி 100 க்கும் மேற்பட்ட வாசகர்கள் பயன் படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த நூலகத்தின் முன்புறம் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப் பட்டது. அதே போன்று தற்போது நூலகத்தின் வடக்குப் பகு தியில் சுற்றுச்சுவரையொட்டி டிரான்ஸ்பார்மர் அமைப்பதற் கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாச கர்கள் நூலகத்தை ஒட்டி வாகனங்கள் நிறுத்தி விட்டு படிக்கச் செல்வதற்கு சிரமம் ஏற்படும். மேலும், கட்டட உட்பகுதியில் புத்தகங்கள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட்ட வாய்ப்புள் ளது. எனவே, நூலகப் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப் பதை தவிர்த்து வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என நூலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
63 கிலோ கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது
கோவை, ஏப்.26- ரயிலில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை காவல் துறையினர், வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில், இருப்புப்பாதை போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சாலிமாரிலிருந்து - திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் திங்களன்று காலை 10 மணிக்கு கோவை வந் தது. அப்போது, கோவை ரயில்வே இருப்புப் பாதை ஆய்வா ளர் சிவகாமி ராணி தலைமையில், உதவி ஆய்வாளர் ராமன் உள்ளிட்ட காவல் துறையினர் ரயிலில் சோதனை மேற் கொண்டனர். அப்போது இருக்கையின் அடியில் நிறைய பொட்ட லங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீ சார், பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயிலில் பய ணித்து வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த சுசில்முண்டா (39) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கோவை மற்றும் கேரளா விற்கு கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந் தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தி வரப்பட்ட 63 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பொள்ளாச்சி, ஏப்.26- ஆனைமலை அருகே கட்டிட தொழிலாளி ஒருவர் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். திருப்பூர் மாவட்டம், தளி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த வர் தர்மராஜ் (48). கட்டிட தொழிலாளியான இவர், கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிற்கு பணம் கொடுக்காமல் குடித்து செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிறன்று இரவு காளியாபுரம் சுடுகாட்டிலுள்ள மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனை மலை காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
கோவை, ஏப்.25- கோவை வடவள்ளியில் உள்ள சான்ஸ்ரே என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரதீஷ். இவரது மனைவி சுகன்யா, தனியார் மருத்துவமனை யில் செவிலியராக பணி யாற்றி வருகிறார். இவர்க ளது 11 வயது மகன் லஷ்மன், அப்பகுதியில் உள்ள தனி யார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், லஷ்மன் ஞாயிறன்று இரவு அருகி லுள்ள பூங்காவில் விளையா டிக் கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக மின்சார ஒயரை மிதித்துள் ளார். இதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சிறுவன் லஷ்மன், ஏற்க னவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை யடுத்து லஷ்மன் உடல் உடற் கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, வடவள்ளி காவல் துறையி னர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மாசு ஏற்படுத்தி வந்த தார் கலவை ஆலைக்கு சீல்
பென்னாகரம், ஏப்.26- பென்னாகரம் அருகே சுற்றுச்சூழ லுக்கு மாசு ஏற்படுத்தி வந்த தார் கலவை ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிலியனூர் கிராமத் தைச் சேர்ந்தவர் அதிமுக விவசாய பிரிவு செயலாளர் டி.ஆர்.அன்பழ கன். இவரது மகன் அருண் (29) என்ப வரின் பெயரில் தார் ஜல்லி கற்கள் கலந்து கலவை தயாரிக்கும் தொழிற் சாலை பிலியனூர் கிராமத்தில் அமைந் துள்ளது. இந்த ஆலையால் உண்டா கும் மாசுவினால் அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் வசிப்போர் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். ஆகவே, புகை மற்றும் தார் துகள் களால் மாசு ஏற்படுவதாக கிராம மக் கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த னர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியின் உத்தர வின் பேரில், மாசுக்கட்டுப்பாடு அதி காரிகள் தொழிற்சாலை உள்ள இடத் தில் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகளை வைத்து ஆட்சியர் திவ்யதர்சினி, சுற்றுச்சூழ லுக்கு மாசு ஏற்படுத்தி வந்த இந்த தொழிற்சாலையை மூடி சீல் வைக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார். இதனையடுத்து சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சிவரஞ்சனி, பென் னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார் ஆகிய அதிகாரிகள் ஆலைக்கு வைத் தனர். இதற்கிடையே ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து அருண் மற்றும் அவரது தாயார் ரத்னா ஆகியோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி யது.
தனியார் பள்ளிகளின் முன் கட்டாய கல்வி உரிமைச்சட்ட அறிவிப்பு பலகையை வைக்கக்கோரி மனு
கோவை, ஏப்.26- கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதிக்கட்சியினர் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தனி யார் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தான அறிவிப்பு பலகை வைக்காமல் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் கேட் டால் அவர்களை மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு, அனைத்து தனியார் பள்ளிகள் முன்பும் இச்சட்டம் குறித்த அறிவிப்பு பலகை வைப்பதோடு, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.