திருப்பூர், ஏப்.25- திருப்பூரில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்ப வர்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரி வித்தும், மாற்று இடம் வழங்க கோரியும் பல்வேறு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தி அந்தந்த பகுதி களில் அரசு நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அவிநாசி சாலை யில் அமைந்துள்ள திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு உட் பட்ட 3ஆவது வார்டு அணைப்புதூர் பகுதியில் 138 குடும் பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வசிக்கும் இடம் நல்லாறு நீர் நிலைப் புறம்போக்கு என்று கூறி 21 நாட்க ளுக்குள் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது. இந்த இடத்தில் குடியிருப்பவர்கள் இதுவரை மின் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்டவற்றை கட்டி வரும் நிலை யில், உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருப்ப தால் நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தைக் காலி செய்ய கால அவகாசத்தை அதிக ரித்து வழங்கவும், மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணைப் புதூர் ஜே.ஜே.நகர் பகுதி மக்கள் மனு அளித்தனர். இதேபோல், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் 40க்கும் மேற்பட்டோரை காலி செய்ய வலியுறுத்தி நோட் டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்க வேண்டியும் நகராட்சித் தலைவர் குமார் தலைமை யில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.