districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தங்கப்பத்திரங்கள் விற்பனை துவங்கியது

தருமபுரி, ஜூன் 19- தருமபுரி அஞ்சல் கோட்டங்களில் உள்ள  தபால் நிலையங்களில் திங்களன்று முதல் தங்கப்பத்திரங்கள் விற்பனை துவங்கியது. இதுதொடர்பாக தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது, தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தருமபுரி தலைமை தபால் நிலையம் மற்றும் 30 துணை தபால் நிலையங்களில் தங் கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இதன் மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப்பத்திரங் களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவிகித வட்டி  கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு 6 மாத காலத் திற்கும் ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது தங்கப்பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இத்திட்டம் திங்களன்று வருகிற ஜூன் 23  ஆம் தேதியன்று வரை தருமபுரி கோட்டத் தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களி லும் செயல்படுத்தப்படும். தபால் நிலையங்க ளில் தங்கப்பத்திரத்தில் பணம் செலுத்துபவர் களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 15 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரம் வழங் கப்படும். இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு அவசியம். தங்கத்தை பத்திர வடி வில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும்  சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்க லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை சமரச மையத்தில் தீர்க்கலாம்

உதகை, ஜூன் 19- நீதிமன்ற வழக்குகளை சமரச முறை யில் தீர்த்துக் கொள்ள பொதுமக்கள் முன்வர  வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி இளந்திரையன் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி  தமிழ்நாடு சமரச மையம் மற்றும் நீலகிரி மாவட்ட சமரச மையம் சார்பில் முத்தரப்பு கூட் டம் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி நீல கிரி மாவட்டம் ஊட்டி காக்காதோப்பில் உள்ள  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடை பெற்றது.  இதில், தமிழ்நாடு சமரச குழு உறுப்பின ரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியு மான இளந்திரையன் தலைமை வகித்தார். அப்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்கு களை சமரசமாக தீர்த்துக் கொள்வதால் இரு தரப்பும் பயன் பெறலாம். இதனால், நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களின் எண்ணிக்கை குறையும். எனவே, வழக் குகளை சமரசமாக முடித்துக் கொள்ள பொது மக்கள் முன்வர வேண்டும், என்றார். இதில், சென்னை இதில் தமிழ்நாடு சமரச மைய பயிற்சியாளர் ஷீலா ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு சமரசத்தின் முக்கியத்து வம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அப்போது கருத் தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற் பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். 

ராயத்து பட்டா பெற சிறப்பு முகாம்

ஈரோடு, ஜூன் 19- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நக ராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நத்தம் மற்றும் நகர நில அளவை கிராம ஆவணங்களில் ‘ராயத்து நிறுத்தப்பட்டது” என பதிவு செய்யப்பட்ட, ராயத்து மனை, ரயத்து நஞ்சை மற்றும் ராயத்து புஞ்சை ஆகிய இனங் களும் அடங்கும்.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டம் அரசாணை எண்.233 மற்றும் 607 இன்படி விசாரணை மற்றும் ஆவணங் களின் அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இவ்வினங்களில் தகுதியான இனங்களை முடிவு செய்வது தொடர்பான சிறப்பு முகாம்கள் வட்டாட்சியர்கள் மற்றும் தனிவட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.  கடந்த 2ஆம் தேதி முதல் நடைபெறும் முகாம்களில் குறை வான விண்ணப்பங்களே வரப்பெற்றுள்ளது. மாவட்டத்தில் 38  ஆயிரத்து 25 இனங்கள் தற்போதைய நிலையில் நிலுவை யில் உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நிலுவை இனங்க ளுக்கு இரயத்து மனை, புன்செய், நஞ்சை பட்டா வழங்கிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தனிவட்டாட்சியர்கள் மூலம் முகாம்கள் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ராயத்து பட்டா பெற்று பயன்பெறலாம். இம்மாதம் 30 ஆம் தேதி  வரை முகாம்கள் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

டாப்சிலிப்பில் யானை சவாரி துவங்க வலியுறுத்தல்

கோவை, ஜூன் 18- டாப்சிலிப்பில் யானை சவாரியை மீண்டும் துவங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியு றுத்தி உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ளது டாப்சிலிப். இங்குள்ள யானைகள் வளர்ப்பு  முகாமில் 26 யானைகள் உள்ளன. இம்முகாமில் உள்ள யானைகளுக்கு பாகன்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, கும்கி ஆபரேசன்கள், வனப்பகுதி மேம்பாடு, யானை சவாரி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்ப்பதையும், யானை சவாரியை யும் விரும்புகின்றனர். சவாரிக்கு நன்கு பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்ட ணம் செலுத்தி வனப்பகுதிக்குள் யானை மீது அமர்ந்து சவாரி செய்வது மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில், கொரோனா கால கட்டத்தில் யானை களின் பாதுகாப்பு கருதி யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற் போது 3 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யானை சவாரி மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால், டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவு இல்லாததால் மீண்டும் யானை சவாரியை தொடங்க வேண்டும் என சுற் றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கொரோனா பாதுகாப்பு காரணங்களால் முதுமலையிலும், டாப்சிலிப்பிலும் அரசின் உத்தரவின்பேரில் யானை சவாரி நிறுத்தப்பட்டது. மீண்டும்  யானை சவாரி தொடங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும், என்றனர்.

10 கி.மீ தூரத்திற்கு அகழி: பொதுமக்கள் நிம்மதி

உதகை, ஜூன் 18- காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க செளுக்காடி முதல் இரும்பு பாலம் வரை 10 கிலோ மீட்டர்  தூரம் அகழி தோண்டும் பணி தீவிர மாக நடைபெற்று வருவதால், கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி களில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால், காட்டுயானைகள் ஊருக் குள் வருவதை தடுக்க வேண்டும் என  பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி னர். இந்நிலையில், கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட  செளுக்காடி பகுதியில் உள்ள கோல் கேட் உட்பட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் நீண்ட  காலமாக இருந்து வருகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரத்தில் முக் கிய சாலைகளில் காட்டு யானைகள் உலா வருவதால், குழந்தைகள், பெண் கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அச் சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் காட்டு யானை கள் பொதுமக்களை விரட்டுகிறது. இத னால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்தது.  இதைத்தொடர்ந்து, காட்டுயானை கள் நடமாட்டம் அதிகம் உள்ள செளுக் காடி, கோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக கூடலூர் இரும்பு பாலம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை வனத்துறை மூலம் அகழி தோண் டும் பணி கடந்த சில நாட்களாக தீவிர மாக நடைபெற்று வருகிறது. பொக் லைன் எந்திரங்கள் மூலம் கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அகழி தோண் டும் பணி நடந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ள னர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், காட்டுயானைகள் ஊருக்குள் தினமும் வந்து பொருட் களை சேதப்படுத்தி வந்தது. அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளை வாக அதிகாரிகள், வனத்துறையினர் அகழி தோண்டுவதாக உறுதி அளித் தனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக் கிறது, என்றனர்.

யோகா தினம்

சேலம், ஜூன் 19- சேலம் காந்தி விளை யாட்டு மைதானத்தில், சர்வ தேச யோகா தினத்தை முன் ்னிட்டு யோகாதான் 2023 என்ற பயிற்சி நடைபெற் றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் முதிய வர்கள் கலந்து கொண்டு பல் வேறு ஆசனங்களை மேற் கொண்டனர். இதைத்தொ டர்ந்து யோகா மேற்கொண்ட அனைவருக்கும் மரக்கன்று கள் வழங்கப்பட்டன.

குப்பாண்டம்பாளையம் மதுபான கடையை அகற்ற கோரிக்கை

திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் வீரபாண்டி அருகே குப்பாண்டம்பாளையத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ரவிச் சந்திரன், குப்பாண்டம்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் குமார், திமுக மாநகரப் பிரதிநிதி  பி.சுரேஷ் உள்பட அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட வருவாய்  அலுவலர் ஜெய் பீம் இடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: குப்பாண்டம்பாளையம் பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடை எண்:1976  என்ற டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இத னால் இப்பகுதியில் இளைஞர்கள் மது போதைக்கு அடிமை யாகி வருகின்றனர். மேலும் இந்த மதுக்கடைக்கு 300 மீட்டர்  தொலைவில் அரசு பள்ளியும், 100 மீட்டர் தொலைவில் ஆரம்ப  சுகாதார நிலையமும் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி யையும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கடந்து தான் மது பான கடைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு 500 மதுபான கடைகளை மூடுவ தாக அறிவித்துள்ளதில் இந்த மதுபான கடையையும் அகற்ற  வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வ தாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை குறித்து அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் ஆகியோருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

திருப்பூர், ஜூன் 19 – திருப்பூர் மாநகராட்சி, 45 ஆவது வார்டு, காயிதே மில்லத்  நகர் பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி னர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45ஆவது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி தொடங்கி யது முதல் அங்கு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வா கத்திடம் இது குறித்து தங்கள் எதிர்ப்பை ஏற்கனவே பொது மக்கள் பதிவு செய்தனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம்  கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவ டிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே தங்கள் எதிர்ப்பை  வெளிப்படுத்தும் வகையில் திங்களன்று 45 ஆவது வார்டு  பகுதி முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறு வனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர்.

திருப்பூரில், ரவுடி கொலை

திருப்பூர், ஜூன் 19 – திருப்பூரில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரை  காவலர்கள் தேடி வருகின்றனர். திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரை சேர்ந்த வர் தினேஷ்குமார், (30). பெயிண்டர். இவர் மீது கொலை  முயற்சி, அடி தடி, வழிப்பறி என பத்துக்கும் மேற்பட்ட  வழக்குகள் உள்ளன. இவருக்கும், ராஜேஷ் என்பவருக்கும்  இடையே முன்விரோதம் மோதல் இருந்தது. ஞாயிறன்று இரவு ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட, பத்து பேர் கொண்ட  கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி னர். ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்னை எழுந்தது.  உடன் வந்த நண்பர்கள், இருவரையும் சமாதனப்படுத்தினர். இதையடுத்து, முன்விரோதம் தொடர்பாக சமாதானப் பேச்சு நடத்தலாம் என கூறி, தினேஷ்குமாரை, கே.என்.பி.சுப்ர மணியம் நகருக்கு அழைத்து சென்றனர். அங்கு காட்டுப் பகு திக்குள் சென்றபோது, ராஜேஷ் உட்பட, பத்து பேரும் தினேஷ் குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நல்லுார் போலீசார் சட லத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத் துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இரு தனிப் படை அமைக்கப்பட்டு இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடு பட்டனர். கொலை தொடர்பாக, அய்யம்பாளையம் மணி கண்டன், (28), சந்திராபுரம் கண்ணன், (25), வள்ளியம்மை நகர்  தினேஷ், (26), மாஸ்கோ நகர் பாலாஜி சரவணன், (28), செட்டி பாளையம் தமிழரசன், (25), பாலகிருஷ்ணன், (25) ஆகிய  ஆறு பேரை கைது செய்தனர். மூன்று டூவீலர், ஆட்டோ பறிமு தல் செய்யப்பட்டன. தலைமறைவான, ராஜேஷ், ராம்குமார்  உட்பட, நான்கு பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

திருப்பூர், ஜூன் 19- திருப்பூரில் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்சோ  சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது.  அருள்புரத்தில் ஜெயந்தி பள்ளி தாளாளர்  கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் விஜயராகவன்  வரவேற்றார். பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் பிரவீன் பானு ஆகி யோர் கூறியதாவது, அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது. இன்று சமூக  வலைதளம், தொலைக்காட்சி என மாணவர் களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன. இன்றைய சமுதாயத்திற்கு தொலைபேசி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அடுத்ததாக  மாணவர்களின் சமுதாயத்தை சீரழிப்பதாக போதைப்பொருள் பழக்கம் உள்ளது. மிகவும்  கவனமாக இருந்தால் மட்டுமே இடையூறு களை தாண்டி உங்களது இலக்கை நோக்கி  செல்ல முடியும். போதை பழக்கம் குறித்து  விழிப்புணர்வு இல்லாமலேயே மாணவர்கள்  அதில் சிக்கிக்கொண்டு தங்களது வாழ்க் கையை இழக்கின்றனர். புதிதாக சந்தைக்கு  வரும் சாக்லேட் குறித்து தெரியாமல் வாங்கா தீர்கள். ஏனெனில் அதில் போதைப்பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுவதால் அதனை  சாப்பிட்டு நாளடைவில் அதற்கு அடிமையாகி  விடும் அவலம் உள்ளது. மாணவர்களாகிய உங்களை நம்பியே இந்த சமுதாயம் உள்ளது  என்றனர்.

முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 19- பொங்குபாளையம் ஊராட்சியில் மாதக் கணக்கில் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.  முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங் குபாளையம் கிளைச் செயலாளர் எஸ். அப்பு சாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த  பரமசிவம்பாளையம், குமாரபாளையம்புதூர், பள்ளிபாளையம், காலம்பாளையம், பொங் குபாளையம் ஆகிய ஊர்களுக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து வரும் இரண்டாவது  திட்ட குடிநீர் தமிழ்நாடு வடிகால் வாரியத்தின்  மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், இப்பகுதிகளுக்கு ஐந்து ஆறு மாத மாகவே முறையாக குடிநீர் வழங்கப்படு வதில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், குடிநீர் வடிகால் வாரியர் அலுவலகத் திற்கும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால் தற்போது வரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்  இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். வாரத்திற்கு இரண்டு  முறை குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக் குமாறு கூறப்பட்டுள்ளது.

தொழில் கடன் கேட்டு குறவர் சமூகத்தினர் மனு

திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் மாவட்டம், பல் லடம் தாலுகா, ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி, அறி வொளி நகர்பகுதியில் 25  ஆண்டுகளுக்கு மேலாக குற வர் காலனியில் 90 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்த படியே ஊசி, பாசி, மாலை  மணி ஆகியவை தயார் செய்து வியாபாரம் செய்கின் றனர். இந்நிலையில் தங்கள்  தொழிலை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் ஒன்றிய  அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ்  மானியக் கடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் திங்க ளன்று கோரிக்கை மனு அளித்தனர்.

மூளைச்சாவு ஏற்பட்ட தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

தருமபுரி, ஜூன் 19- தருமபுரி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்ட நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (40). ஐடிஐ படித்து  முடித்துள்ள இவர், பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று நல்லம்பள்ளி வழியாக செல்லும், சேலம் - தருமபுரி சாலையில் ஒன்ன ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழி யாக வந்த இருசக்கர வாகனம் மோதி தீப்பாஞ்சி படுகாய மடைந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிக்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர் ஞாயிறன்று இரவு மூளைச்சாவு ஏற்பட்டு, உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதையடுத்து அவரது சகோதரர் சரவணனின் விருப்பத்தின்பேரில், தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்பின் தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை மயக்கவியல் தலைமை மருத்துவர் முரு கேசன் தலைமையில், மருத்துவக்குழு அவரது இருதயம், கணையம் கல்லீரல் கிட்னி ஆகிய நான்கு உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து சேலம், ஈரோடு, ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் மரணமடைந்த கூலித்தொழிலாளியான தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து

பள்ளிபாளையம், ஜுன் 19- தனியார் டிராவல்ஸ் பேருந்து, சாலையோர தடுப்பு மீது நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில், பலர் காயமடைந் தனர். பள்ளிபாளையத்தில், தனியார் சர்க்கரை ஆலை செயல் படுகிறது. இதில், பணியாற்றுவதற்காக 15க்கும் மேற்பட்ட வர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியார் டிரா வல்ஸ் வாகனம் மூலமாக, சேலம் சாலையிலிருந்து பள்ளி பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.  வாகனத்தினை மஸ்தான் என்பவர் ஒட்டி வந்தார். அப்பொழுது வெப்படை பிர தான சாலை அருகே திங்களன்று அதிகாலை மூன்று மணிக்கு வாகனம் வந்த பொழுது, எதிர்பாராத விதமாக  சாலையின் நடுவே இருந்த டிவைடர் கற்கள் மேலே மோதி விபத்துக் குள்ளானது. இதில்,  வாகனத்தின் முன்பகுதி கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் விபத்தில் காயமடைந்த, செல்வகுமார், துரைசாமி, ராஜா முருகன், கஜபதி, பிரித்தி விகாஸ், வாகன ஓட்டுநர் மஸ்தான் உள்ளிட்ட ஏழு பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட னர். இதனையடுத்து சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பள்ளிபாளையம், ஜூன் 19- வெப்படை காவல் நிலையத்தில் தனியார் அமைப்பின் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தை அடுத்துள்ள வெப்படை காவல் நிலை யத்தில், ஈரோடு விதைகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயி றன்று நடைபெற்றது. இதில் கரம் கோர்ப் போம் இளைஞர் சேவைக்குழு (வெப்படை)  மற்றும் அக்னிச் சிறகுகள் தன்னார்வ அமைப்பு (வெப்படை) ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன. இந்நிகழ்வில், வெப் படை காவல் ஆய்வாளர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப் பட்டன.

மாயாற்றின் கரைப்பகுதிக்கு மக்கள் செல்லவதை தடுக்க கோரிக்கை

உதகை, ஜூன் 19- முதுமலை வனப்பகுதியில் உள்ள மாயாறு ஆற்றங் கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை யானை, புலி, முதலை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ள தால், அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க  வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை நாட்களில் பல பகுதி களிலிருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து  செல்கின்றனர். குறிப்பாக கர்நாடகா, கேரளம் ஆகிய மாநி லத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகம் வந்தடைந்து, யானைகள் முகாமை கண்டு ரசிப்ப தோடு, வனப்பகுதிகளுக்குள் சென்று வனவிலங்குகளை கண்டு மகிழ்கின்றனர். சில சமயங்களில் சுற்றுலா பயணிகள் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைகின்றன. இந்நிலையில், ஞாயி றன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பய ணிகள் முதுமலையில் குவிந்தனர். குறிப்பாக மாயாறு ஆற் றங்கரையோரம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், சிலர் ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத் தனர். அப்பகுதியானது யானை, புலிகள் நடமாட்டமும், முதலைகள் உள்ள பகுதிகளாகவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங் கினர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வரை  ாலை, மாலை என இரு வேளையிலும் ஆற்றங்கரையோரம் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உண்ணாவிரதம்

சேலம், ஜூன் 19- சேலம் மாவட்டம், வாழப் பாடி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் 60க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 100 ஆண்டு களுக்கும் மேலாக அனுப வத்தின் குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால், பட்டா  கேட்டு அப்பகுதி பொதுமக் கள் கால்நடைகளை வைத்து, குடும்பத்துடன் உண்ணா விரத போரட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் துரித நடவ டிக்கை எடுத்து பட்டா வழங் கும் வரை போராட்டம் தொட ரும், என தெரிவித்துள்ளனர்.