ஆதார் சேவை மையத்தை திறக்க கோரிக்கை
நாமக்கல், நவ.13- ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள ஆதார் சேவை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவல கத்தின் மாடியில் செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம், இ - சேவை மையம் போன்றவை மாற்றுத்திறனாளிகள், பொது மக்களின் வசதிக்காக கீழே உள்ள தரைத்தளத்திற்கு மாற்றப் பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆதாா் அட்டை தொடர்பான சேவை மையம் இரு மாதங்களாக மூடப்பட்டுள் ளது. ஆதார் சேவை மையத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வது, கட்டணம் செலுத்துவது போன்ற நிர்வாக கோளாறு காரணமாக மையத்திற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பணியாளர்கள் சிலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரு மாதங்களாக ஆதார் சேவை மையம் செயல்படாத நிலையில், பொதுமக்களுக் கான ஆதார் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மையத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
உதகை, நவ.13- பணி மாறுதலை எதிர்த்து நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்க ளின் கீழ் 65 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 330 பணியாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த சங்கங்களில் 23 செயலா ளர்களுக்கு கூட்டுறவுத்துறை பணி மாறு தல் வழங்கியது. இதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியா ளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் புதனன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக மாவட்டத் திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் இயங்கவில்லை. இதுகுறித்து கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ரா.தயாளனிடம் கேட்ட போது, பொதுப்பணி நிலைத் திறன் கீழ் வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்க ளுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 77 சங்கங்களில் 21 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதில், ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார். வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணத்தால் 6 பேரின் பணி மாறுதல் ரத்து செய்யப் பட்டது. 15 நபர்கள் பணியில் சேர வில்லை. இதில், 6 நபர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், இவர்களுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இவர்கள் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய் யக்கோரி வருகின்றனர். மேலும், நோட் டீஸ் வழங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சங்கங்களின் கீழ் இயங்கும் 66 ரேஷன் கடைகளில் 48 கடை கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படுவர்கள் என்பதால் அருகில் உள்ள ரேசன் கடை ஊழி யர்களை கொண்டு இந்த கடைகளை வியாழனன்று முதல் திறக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது, என்றார்.
மருத்துவருக்கு கத்திக்குத்து; ஆர்ப்பாட்டம்
சேலம், நவ.13- சென்னையில் அரசு மருத்துவரை கத்தி யால் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து, பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத் துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டி அரசு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு துணைத்தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நோயாளியின் உற வினர்கள் பாலாஜியை புதனன்று கத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம டைந்த அவர், தீவிர சிகிக்சை பெற்று வருகி றார். பணியிலிருந்த அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், மருத்துவர் தாக் கப்பட்டதைக் கண்டித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்து வமனை மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, கோவை, ஈரோடு, தரும புரி, நாமக்கல், உதகை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மருத்துவர்கள் அடை யாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நொரம்பு மண் கடத்தல்: 3 பேர் கைது
தருமபுரி, நவ.13- பென்னாகரம் அருகே டிராக்டரில் நொரம்பு மண் கடத்த லில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வருவாய் ஆய்வா ளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் கூத்தப்பாடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்யும் பணிக்காக வாக னத்தில் சென்று கொண்டிருந்தனர். ஊட்டமலை பகுதி அருகே சென்றபோது, எதிரே 3 டிராக்டரில் சிலர் மண் எடுத்து வந்த னர். தொடர்ந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 யூனிட் நொரம்பு மண் கடத்தி யது தெரியவந்தது. இதையடுத்து மண் கடத்தியவர்களை பிடித்து அதிகாரிகள், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நொரம்பு மண் கடத்தலில் ஈடுபட்ட மடம் பகுதி யைச் சேர்ந்த துரை (32), பொன்முடி (42), மூர்த்தி (27) ஆகி யோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேசன் அரிசியை கடத்த முயற்சி
கோவை, நவ.13- நான்கு டன் ரேசன் அரி சியை கடத்த முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே கருமத்தம் பட்டியில் செயல்பட்டு வரும் கணியூர் சுங்கச்சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகை யில் டாடா ஏஸ் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந் தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை கரு மத்தம்பட்டி காவல் நிலையத் திற்கு அழைத்து சென்று விசா ரணை செய்தபோது குனிய முத்தூர் சேர்ந்த சம்சுதீன் என்பதும் திருப்பூர் பகுதி களில் ரேசன் அரிசியை மக் களிடமிருந்து வாங்கி வந்து கேரளாவுக்கு கடத்த முயன் றது தெரிய வந்தது. இதைய டுத்து 4 டன் ரேஷன் அரிசி பறி முதல் செய்த போலீசார், சம்சு தீன் மீது வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
நில அளவைச் சான்று தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
அவிநாசி, நவ.13- கூலித்தொழிலாளிக்கு சொந்தமான இடத்தை அளந்ததற் கான சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவு மாகப் பிடித்து கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குன்னத்தூர் வட்டம் இடையர்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் முருகே சன் (45). கூலித்தொழிலாளியான முருகேசன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு பூர்வீக வகையில் சொந்தமாக அதே பகுதி யில் 39 சென்ட் அளவுள்ள நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளந்து தர வேண்டி, இடையர்பாளையம் கிராம நிர்வாக அலு வலர் வின்சென்ட் தியாகராஜனிடம் (44) முருகேசன் விண்ணப் பித்துள்ளார். ஆறு மாதங்களாக முருகேசனை அலைய விட்டு, இடத்தை அளந்து முடித்த கிராம நிர்வாக அலுவ லர் வின்சென்ட் தியாகராஜன், அதற்கான சான்றிதழை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து, முருகேசன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப் புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகேசனிடம் கொடுத்து புதனன்று கிராம நிர் வாக அலுவலர் வின்சென்ட் தியாகராஜனிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சாரின் திட்டப்படி, முருகேசன் லஞ்சப் பணத்தை கொடுக்க வருவதாக வின்சென்ட் தியாகராஜனிடம் கூறியுள்ளார். அலு வலகத்தில் வைத்து பணத்தை கொடுக்க வேண்டாம், என்று கூறிய வின்சென்ட் தியாகராஜன், குன்னத்தூரில் இருந்து செங்கப்பள்ளி செல்லும் வழியில் மூலக்கடை என்ற பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டீக்கடைக்கு வரச்சொல்லி அங்கே வைத்து முருகேசனிடம் லஞ்சப் பணத்தை பெற்றுள்ளார். அப்போது, அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வின் சென்ட் தியாகராஜனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட வின்சென்ட் தியாகராஜனை குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அழைத்து வந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பூர், நவ.13- காங்கேயம் அருகே 112 பயனாளிகளுக்கு மாவட்ட வரு வாய் அலுவலர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஊதியூர் பழனி பாதயாத்திரை கோவில் மண்டபத்தில் புதனன்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில், நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் 112 பயனாளிகளுக்கு ரூ.60.19 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெளிக்ஸ் ராஜா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதிகள் இன்றி நரிக்குறவர் இன மக்கள் கால் நூற்றாண்டாக தவிப்பு
திருப்பூர், நவ.13- பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் வசிக் கும் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு 25 ஆண் டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக வேதனையு டன் கூறுகின்றனர். பல்லடம் தாலுக்கா, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் தமிழக அரசின் அடுக்குமாடி குடி யிருப்பு உள்ளது. இதன் அருகிலேயே, நரிக்குறவர் இன மக் கள் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங் கப்படவில்லை. மழை காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் வந்துவிடுவதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் வந்து பார்ப்பதில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு வீட்டில் இரண்டு முதல் மூன்று குடும்பங்கள் வரை தங்கியுள்ளனர். இங்குள்ள குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. இதுகுறித்து பெற்றோர்க ளிடம் கேட்டால், போதிய வருமானம் இல்லை என்று கூறு கின்றனர்.
பனிப்பொழிவு ஆரம்பமானதால் விளைச்சல் குறைவு திருப்பூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2000க்கு விற்பனை
திருப்பூர், நவ. 13 - திருப்பூர் காமராஜர் சாலையில் பெருமாள் கோவில் எதிரில் மாநக ராட்சி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகி றது. இந்த பூ மார்க்கெட்டுக்கு நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், நிலக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகி றது. சில்லறை மற்றும் மொத்த வியா பாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற் பனை செய்கிறார்கள்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மல்லிகை, முல்லை பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது. பனிப்பொழிலிவு காரணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைவா கவே உள்ளது. மேலும் தொடர் முகூர்த் தம் என்பதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன் கார ணமாக கடந்த வாரம் கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ, புதனன்று ரூ.2000க்கு விற்பனை செய் யப்பட்டது. இதுபோல் முல்லை ரூ. 800க் கும், ஜாதிமல்லி ரூ.600க்கும், மைசூர் காக் கடா 600, சேலம் காக்கடா ரூ.720க்கும் விற்பனையானது. மேலும் மற்ற பூக்க ளின் விலையும் உயர்ந்து காணப்பட் டது. ஒரு கிலோ சம்பங்கி ரூ.140 க்கும், பெங்களூர் ரோஸ் வகைகள் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய் யப்பட்டது. அரளி ரூபாய் 240 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகி றது தொடர்ந்து திருமண முகூர்த்த நாட்கள் வருவதைத் தொடர்ந்து பூக்க ளின் விலை ஏற்றத்தால் சில்லறை வியா பாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருப்பதாகத் தெரிவித்தனர்.
மின் இணைப்பு வழங்க தாமதம்: விவசாயிகள் வேதனை
உடுமலை, நவ.13- தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என வெளி யிடப்பட்ட அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை பதிவு செய்த பல விவசா யிகளுக்கு மின் இணைப்பு வழங்காத நிலை நீடிப்பது வேதனை அளிக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவ சாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப் படாமல் இருந்தது. இதையடுத்து தட்கல் என்ற திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டது. இதில், குதிரை திறன் அடிப்ப டையில் பல லட்சம் வரை பணம் கட்டி, மின் இணைப்புகள் பெற வேண்டி இருந்தது. இத்திட்டம் வசதி படைத்த விவசாயிகளுக்கு மட்டுமே பயன்பட் டது. மேலும், பல ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு பதிவு செய்த விவசா யிகள் பாதிக்கப்படுவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வுடன், பதிவு செய்த அனைத்து விவசா யிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு பின், மின் இணைப்பு கேட்டு பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அலுவல கத்தில் இருந்து கடிதங்கள் அனுப் பட்டது. இதைத் தொடர்ந்து, விவசாயிக ளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகை யில், விவசாய நிலங்களில் கூடுதல் மின் கம்பங்கள் நடப்பட்டது. இருப்பினும், இன்று வரை பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், விண்ணப்பம் முதல் மின் கம்பம் நடும் வரை பணம் பெற்ற அதிகாரிகள் இன்று வரை மின் இணைப்பு வழங்கா மல் உள்ளனர். காரணம் கேட்டால், அரசு உத்தரவு வரவில்லை என்று பதில் தருகி றார்கள். அரசின் இலவச மின் இணைப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் மின் கம்பங்களை நடுவதற்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். எனவே விவசா யிகளுக்கு விரைவில் மின் இணைப்பு கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வேதனையுடன் தெரிவித்த னர்.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் விநியோகம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தம்
உடுமலை, நவ.13- உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் இருக் கும் ஐந்து பேரூராட்சி மற்றும் 476 கிராமங்களுக்கு 14, 15ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்ப டும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமூர்த்தி அணை யின் அருகில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் நாற்று பண்ணைக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தளி கால்வாய் சரகத்தில் பணிகள் நடை பெற்று வருகிறது. இவ்வழியாக கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் கள் செல்வதால், உடுமலை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 318 ஊரக குடியிருப்புகள், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் 158 குடியிருப்புகள் என மொத்தமாக 476 குடியிருப்புகளும், மடத்துக்குளம், சங்கரம நல்லூர், கொமரலிங்கம், கணியூர் மற்றும் தளி உள்ளிட்ட ஐந்து பேரூராட்சி பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும். மேலும், கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதால் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரிக்கை
தருமபுரி, நவ.13- பிடமனேரியில் ஆக்கிரமிப்பு செய் யப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி அப்ப குதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரி, நெல்லி நகர், வி.ஜெட்டிஅள்ளி, மாந் தோப்பு, நந்தி நகர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், இலக்கியம்பட்டி ஊராட் சிக்குட்பட்ட பிடமனேரி பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகு திகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். பிடமனேரி ஏரி கரையோ ரம் ஏரிக்கான சுமார் 7 ஏக்கர் பரப்பளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளது. ஏரியில் ஆகாயத்தாமரை நிறைந் திருப்பதால் 2 ஆண்டுகளாக இந்த ஏரியில் மீன் வளர்ப்பு, மீன் ஏலம் நின்று விட்டது. எனவே, பிடமனேரியில் நிறைந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும். மேலும், ஆக்கி ரமிப்பு செய்யப்பட்ட ஏரியின் நிலத்தை மீட்க வேண்டும். ஏரியின் கோடி வாய்க் கால் வழியாக வெளியேறும் தண்ணீர் சீராகவும், விளைநிலங்களை பாதிக்கா மலும் செல்ல கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும், என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாம்புகளை பிடிக்க நீர் நிரப்பிய வாகனத்தை பயன்படுத்தும் நிலை!
நாமக்கல், நவ.13- சிறிய ரக வாகனங்கள் இல்லாத தால், வீட்டினுள் புகுந்த பாம்பு களை பிடிப்பதற்காக, கனரக நீர் நிரம்பிய வாகனத்தை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் மற்றும் பள்ளிபாளை யம் பகுதிகளில் தீயணைப்புத் துறை சார்பில், வெப்படையில் ஒரு தீயணைப்பு நிலையமும், குமார பாளையம் பகுதியில் ஒரு தீய ணைப்பு நிலையமும் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளும் அந்தந்த தாலுகா பகுதிகளில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. குமாரபாளையம், பள்ளிபாளை யம் பகுதியில் ஏற்படும் விபத்துகளி னால் ஏற்படும் தீயை அணைப்ப தற்கு, இங்குள்ள நவீன கனரக தீய ணைப்பு வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். தீயணைப்பு மீட்பு பணி உள்ளிட்ட அனைத்து வித மான தேவைகளுக்கும் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் எப்போதும் உள்ளது. குமாரபாளை யம், பள்ளிபாளையம் பகுதியில் தொழிற்சாலைகள், பஞ்சாலை, தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்றாலும், தீ தொடர்பான செல்போன் அழைப்புகளைவிட, வீட்டினுள் பாம்பு புகுந்து விட்டது, வீட்டின் அருகே நிறுத்தியி ருந்த வாகனத்தில் பாம்பு புகுந்து விட்டது என்ற அழைப்புகள் தான் அதிகளவில் வருகின்றன. இப்பகுதி முழுக்க கிராமங்களே அதிகளவு இருப்பதால், சுற்றிலும் வயல் வரப்பு காரணமாக பாம்புகள் அதிகளவில் உள்ளன. அப்படி சில நேரங்களில் வீட்டினுள் பாம்பு போகும் தகவல்களை பொதுமக்கள் தீயணைப்பு நிலை யத்திற்கு தொடர்பு கொண்டு சொல் லும் போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் கனரக வாகனத் தைக் கொண்டு குறுகலான பாதை களை கடந்து சிறிய சிறிய கிராமப் புற சாலைகளை சிரமப்பட்டு கடந்து அங்கு சென்று பாம்புகளை மீட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் இந்த கன ரக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை காரணமாக, நீர் நிரப்பிய கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வயல் வரப்புகளை கடந்து சென்றும் பாம்புகளை பிடித்து வருகின்றனர். கிராமப்பகுதியை பொருத்தவரை பாம்புகள் அதிகம் இருப்பதும், தற்போது மழைக்காலம் தொடங் கிவிட்ட காரணத்தால் தீய ணைப்புத் துறையினருக்கு நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்டவர் கள் தொடர்பு கொண்டு பாம்பு களைப் பிடிக்க அழைக்கின்றனர். அப்போது கனரக நீர் நிரப்பிய தீய ணைப்பு வாகனத்துடன் தீய ணைப்பு வீரர்கள் செல்ல மிகவும் சிர மத்துக்குள்ளாகின்றனர். ஒரு சில சமயங்களில் தங்கள் சொந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்து கின்றனர். குமாரபாளையம், பள்ளி பாளையம் பகுதிக்கு பாம்புகளைப் பிடிக்க சிறிய ரக வாகனத்தை தீய ணைப்புத் துறைக்கு வழங்கினால், கனரக வாகனத்தின் எரிபொருட் கள் சிக்கனப்படுத்தப்படும். குறுக லான சாலையை கடந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியும். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அவர்களுக்கு சிறிய ரக வாகனத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் கல்லூரி பேராசிரியர் கைது
கோவை, நவ.13- கோவையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், எம்.எஸ்.சி பட்டதாரி. இவர் கோவையில் தங்கி தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்தார். பின்னர் அந்த வேலையை விட்டு நின்று விட்டார். அந்த நிறுவனத்தினர் அவர் வேலைக்கு சேரும் போது அவரின் கல்வி சான்றிதழை வாங்கி உள்ளனர். வேலையை விட்டு நின்ற பின்பு அந்த சான்றிதழை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தான் கோவையில் கல்லூரி யில் படிக்கும் போது தனக்கு வகுப்பு எடுத்த கல்வீரம்பாளை யம் முருகன் நகர் நேரு தெருவை சேர்ந்த பேராசிரியர் சிவப்பிர காசம் (45) என்பவரின் உதவியை நாடியுள்ளார். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணை தொடர்பு கொண்ட சிவபிரகாசம் சான்றிதழை வாங்கி வைத்து உள்ளதாகவும், வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கோவைக்கு வருமாறு அழைத் துள்ளார். இதனை நம்பி அந்த இளம்பெண் செவ்வாயன்று சிவப்பிரகாசம் வீட்டுக்கு சென்றார். அப்போது பேராசிரியர் சிவப்பிரகாசம் திடீரென இளம்பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது பிடியில் இருந்து தப்பிய இளம்பெண் வீட்டின் குளியல் அறைக் குள் புகுந்து கொண்டார். பின்னர் செல்போனில் தனது தோழி ஒருவரை தொடர்புகொண்டு, விவரத்தை கூறியுள் ளார். அவரது தோழி இதுகுறித்து வடவள்ளி போலீ சாருக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் லொகேஷனை வைத்து மாணவி இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். வீட்டுக்குள் சென்று குளியல் அறையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். தொடர்ந்து, கல்லூரி பேராசிரி யர் சிவப்பிரகாசத்தை கைது செய்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.