districts

img

திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்திற்குள் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த கோரிக்கை

திருப்பூர், ஜூன் 26- திருப்பூர் கலைஞர் பேருந்து நிலை யத்திற்குள் உள்கட்டமைப்பு வசதி களை அதிகப்படுத்த வலியுறுத்தி இந் திய ஜனநாயக வாலிபர் சங்க தெற்கு ஒன்றியம்  மற்றும் தெற்கு மாநகர குழுக் கள் சார்பில் திங்களன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாலிபர் சஙக மாநகர துணைச் செய லாளர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கலைஞர் பேருந்து நிலையத்திற்குள் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். மேலும், கழிப்ப றைகள் பராமரிப்பு இல்லாமல் அசுத்த மாக உள்ளது, அதை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பேருந்துகள் வேக மாக வெளியே வருவதும் உள்ளே போவதுமாக உள்ளது. அதனால் விபத் துகள் ஏற்படுகின்றன பேருந்துகள் அள வான வேகத்தில் செல்வதை உறுதிப் படுத்த வேண்டும். பேருந்துகள் உள்ளே  வரும் இடத்திலும் வெளியே செல்லும்  இடத்திலும் வேகத்தடைகள் அமைக்க  வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அரை கள் ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருள்,  மாவட்ட பொருளாளர் கு.பாலமுரளி, தெற்கு ஒன்றிய செயலாளர் க.சிந்தன் மாநகரச் செயலாளர் த.நவீன் லட்சு மணன் உட்பட திரளானோர் பங்கேற் றனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.