அன்னூர், ஜன.8- அன்னூர் தபால் அலுவலகத்தில் மாதம் ஒரு முறை ஆதார் அட்டை திருத்தும் முகாமை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வங்கி கணக்கு துவங்க, வீட்டு சிலிண்டர் பெற உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை அவசி யப்படுகிறது. அதேநேரம், ஆதார் அட்டையில் செல் போன் எண் மாற்றம் செய்யவும், பெயர் மற்றும் விலா சம் பிழை திருத்தம் செய்யவும் வட்டாட்சியர் அலுவ லகத்தையே அனுக வேண்டியுள்ளது. அங்கும் தினசரி 50 நபர்களுக்கு மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அன்னூர் அஞ்சல் அலுவலகத்தில் மாதம் ஒருமுறை ஆதார் திருத்தம் செய்யும் முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று அன்னூர் தபால் நிலை யத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆலோசனை செய்து பரி சீலிக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக இந்த மனு வினை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப் பினர்கள் மணிகண்டன், சத்தியராஜ், கபீர், சர வணன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்தனர்.