districts

img

விதிமீறல் கட்டிடங்களை முறைப்படுத்த கால அவகாசம் வழங்க கோரிக்கை

பொள்ளாச்சி, ஏப்.12- பொள்ளாச்சியில் விதிமீறல் கட்டடங்களை முறை படுத்த கால அவகாசம் வழங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வர்த்தக நோக்கி லான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந் தன. குறிப்பாக மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனி ஆகிய பகுதிகளில் அதிகளவில் விதிமீறல்கள்  இருப்பதும் தெரியவந்தது.  இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு விதிமீறல் கட்டிடங்களுக்கு எச்சரிக்கை துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதில், பாதிக்கப்பட்ட சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதில், வரும் ஏப்.20 ஆம் தேதிக்குள் இந்த விதிமீறல் களை முறைப்படுத்திக் கொள்ள வேண்டுமென நீதி மன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், தொழில் வர்த்தக சபை, சிறு வியா பாரிகள் சங்கத்தினர் சார்பில் மகாலிங்கபுரத்தில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து நிர்வாகி கள் கூறுகையில், பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழகம் முழு வதுமே இதுபோன்ற விதிமீறல்கள் உள்ளன. மாஸ்டர் பிளான் அடிப்படையில் 5 ஆண்டுக்கு ஒரு முறை சீராய்வு செய்திருக்க வேண்டும்.  ஆனால், கடந்த 45 ஆண்டு களாக இந்த சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஏப்.20 ஆம் தேதிக்குள் விதிமீறல்களை சரி செய்வது என்பது இயலாத காரியம். ஆகவே, தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன், விதிமீறல்களை முறைப்படுத்த கால அவகாசம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் காலவரையற்ற கடையடைப்பு உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி யில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.