districts

மக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை நீடிக்க கோரிக்கை

உடுமலை, ஜூன் 22- வழிகாட்டி மதிப்பு வரைவுப்பட்டி யில் குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கான கால அவகாசத்தை நீடிக்க வேண் டும் என தமிழக முதல்வருக்கு பத்திர  எழுத்தாளர் மனு அனுப்பி உள்ளார். பத்திர எழுத்தாளர் சிவசங்கர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருப்பதாவது, கடந்த 10 ஆம் தேதி, முன் மொழியப்பட்ட வழிகாட்டி மதிப்பு வரை வுப்பட்டியலை பதிவுத்துறை ஆன்லை னில் வெளியிட்டது. ஆனால் அந்த வரை வுப் பட்டியலை கிராம வாரியாக மட் டுமே பார்க்கும் வாய்ப்பு இருந்தது. எனவே பெரும்பான்மையான மக்கள்  தங்கள் புல எண்ணுக்கான தற்போ தைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு?  முன்மொழியப்பட்ட வரைவுப்பட் டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டி  மதிப்பு எவ்வளவு? என்ற விவரத்தை  அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால், வரைவுப்பட்டி யலைப் பார்த்தபோது நிலத்தின் வகைப் பாடு வாரியாகவும், புல எண் வாரியா கவும் மக்கள் அவரவர் புல எண்ணை  உள்ளீடு செய்து தன் புல எண்ணுக்கு தற்போது எவ்வளவு மதிப்பு உள்ளது. முன்மொழியப்பட்ட வரைவுப் பட்டிய லில் எவ்வளவு மதிப்பு உள்ளது என்று  எளிதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு  சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்து கொண் டேன். இந்நிலையில், வழிகாட்டி மதிப்பு  வரைவுப்பட்டியல் குறித்து மக்கள் கருத்துக் கேட்புக்கான 15 நாள்கள் கால  அவகாசம் திங்கட்கிழமை 24.06.2024 முடிவடைவதால் பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 30 தேதி வரை நீட்டிக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளது.