districts

img

மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைந்து காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய கோரிக்கை

திருப்பூர், ஆக.6- மருத்துவ காப்பீட்டு திட்ட குள றுபடிகளை களைந்து, காசில்லா மருத்துவத்தை உறுதி செய்யக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்து  துறை ஓய்வூதியர் சங்கத்தினர் திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் க.சண் முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அப்போது, மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைந்து, காசில்லா மருத்துவம் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தேர்தல்கால  வாக்குறுதிபடி 70 வயதை கடந்த  ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக  10 விழுக்காடு ஓய்வூதியம் வழங்க  வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.7,850 அனைவருக்கும் வழங்க வேண்டும். ஓய்வூ தியத்தை தொகுத்து தரும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து  12 ஆண்டுகளாக குறைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைள் வலியு றுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர்  பி.மாயன்குட்டி, அவிநாசி வட்டக் கிளைத் தலைவர் எஸ்.கோபாலகி ருஷ்ணன், ஊத்துக்குளி வட்டக் கிளைச் செயலாளர் எஸ்.பாஸ்கரன்,  பல்லடம் வட்டக்கிளைத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, திருப்பூர்  வட்டக் கிளை துணைத் தலைவர் என்.குரு ராஜன் ஆகியோர் பேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் அ.நிசார் அக மது சிறப்புரையாற்றினார். இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வயநாடு பேரிடரில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  உடுமலை: உடுமலை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சோ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மு.பாலசந்திர மூர்த்தி கோரிக்கைகள் குறித்து  பேசினார். மாவட்ட இணைச்செய லாளர்கள் வி.ஜெயபால்ராஜ், ஏ. குணசேகரன், உடுமலைப்பேட்டை தலைவர் தா.இ.தாசன், மடத்துக் குளம் வட்டக்கிளைச் செயலாளர்  எம்.கருணாநிதி, அரசு ஊழியர் சங்க  உடுமலை வட்டக்கிளைச் செய லாளர் கே.வெங்கிடுசாமி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பின் நிர்வாகி எஸ்.செல் லத்துரை சிறப்புரையாற்றினார். தாராபுரம்: தாராபுரம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட  துணைத்தலைவர் பெ.மணிவேலு தலைமை வகித்தார். மாவட்டப்  பொருளாளர் கி.மேகவர்ணன்  கோரிக்கைகளை விளக்கி பேசி னார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.ஆறுமுகம், தாராபு ரம் வட்டக்கிளைத் தலைவர் எம். பீர்ஜாபர், காங்கேயம் வட்டக்கி ளைச் செயலாளர் பி.ராஜன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநில  செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந் திரன் நிறைவுரையாற்றினார்.இதில் திரளானோர் பங்கேற்றனர்.