உடுமலை, ஏப்.10- உடுமலை வட்டார மலைவாழ் மக்கள் குடி யிருப்பு பகுதிகளில், மக்களுக்கு காய்ச்சல் இருப்பதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வன உரிமைக்குழு கோரிக்கை வைத்துள் ளது. உடுமலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவடாப்பு, குழிப்பட்டி, குரு மலை, கருமுட்டி, பூச்சிகொட்டாம்பாறை, திருமூர்த்திமலை, ஈசல் திட்டு, தளிஞ்சி, கோடந்தூர், கொட்டையாறு, பொருப்பாறு, ஆட்டுமலை, வசம்குழம், புளியம்பட்டி, மயி லாடும்பாறை, கரட்டுப்பதி, சேலையூத்து, காட்டுபட்டி உள்ளிட்ட 18 குடியிருப்பு பகுதி கள் உள்ளன. இதில், சில குடியிருப்பு பகுதிகள் மலை அடிவாரப் பகுதியிலும், அதிகமான குடி யிருப்புக்கள் அடர் வனப்பகுதியில் பல கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கின்றன. மேலும் மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை மற்றும் மேல் குருமலை குடியிருப்புகள் ஒரே மலைப்ப குதியில் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப் பகுதி மக்கள் கல்லூரி மற்றும் மருத்துவ தேவைக்களுக்கு உடுமலை நகருக்கு சுமார் அறுபது கிலோ மீட்டர் சுற்றித்தான் வர முடியும். மேலும் திருமூர்த்திமலை வழியாக உடுமலை செல்ல அடர் வனப்பகுதியில் தான் வர முடியும். இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு தற் பொழுது இருமல் மற்றும் கடுமையான காய்ச்சல் இருப்பதால் சிறப்பு மருத்து வக்குழு சிகிச்சை தர வேண்டும் என வன உரிமைக்குழு கோரிக்கை வைத்துள்ளது.