districts

img

குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியை மூட கோரிக்கை

பொள்ளாச்சி, பிப்.2-  பொள்ளாச்சி அடுத்த பக் கோதிபாளையம் அருகே  குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியை உட னடியாக மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் கோட்டம் பட்டி ஊராட்சிக்குட்டபட்டது பக்கோதிபாளையம். இந்நிலையில், பக் கோதிபாளையத்திலிருந்து பாலமநல்லூர் மற்றும் மாக்கினாம்பட்டி செல்லும் வழி யில் குடிநீர் இணைப்பிற்காக சில நாட்க ளுக்கு முன்பு 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த குழியானது மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக் கர வாகனங்களிலும் செல்லும் வாகன ஓட்டி கள் அப்பகுதியை பெரும் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே, ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு  குழியை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.