districts

img

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பட்டா வழங்க சாமளாபுரம் நில உரிமை இயக்கம் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 17- சாமளாபுரத்தில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் 135 வீடுகளை அப்புறப்படுத்தும் முடிவைக் கைவிட்டு, உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு  வழிகாட்டுதலை அடிப்படையா கக் கொண்டு விதிகளைத் தளர்த்தி  வகை மாற்றம் செய்து அவர்களுக் குப் பட்டா வழங்கும்படி சாமளா புரம் நில உரிமைப் பாதுகாப்பு இயக்கம் கோரியுள்ளது. சாமளாபுரம் நில உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் கரு.தமிழரசன், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.நாதன் ஆகியோர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்ல டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் ச. நந்தகோபால் ஆகியோருடன் புத னன்று திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் சாகுல் ஹமீ துவை சந்தித்து கோரிக்கை மனு  அளித்தனர். அந்த மனுவில், கடந்த மார்ச் 1ஆம் தேதி சாமளாபுரத்தில் அருந் ததியர் மக்கள் வாழும் 135 வீடு களை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நீர்வள ஆதார அமைப்பு மூலம் நோட் டீஸ் கொடுத்துள்ளனர். இங்கு  135 வீடுகளில் 160 குடும்பங்களைச்  சேர்ந்த 860க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த இடம் ஏரிப் புறம்போக்கின் மேடான இடத்தில் அமைந்துள்ளது. இந்த இட;ததில் தண்ணீரால் எந்த பாதிப்பும் இல்லை. குளம் நிறையும்போதும் குடியிருப்பில் இருந்து 100 அடி தூரத்தில் தண் ணீர் நின்றுவிடும். அதற்கு கூடுத லாக வரும் தண்ணீர் அருகாமை யில் இருக்கும் கால்வாய் மூலம் நொய்யல் ஆற்றுக்குச் சென்றுவி டும்.  இந்நிலையில், நாங்கள் வசிக் கும் பகுதி ஏரிப் புறம்போக்கு என  வருவாய்த் துறை ஆவணங்களில் இருக்கிறது.

ஆனால் இதே பகுதி யில் வகை மாற்றம் செய்து சுமார்  40 ஏக்கர் வரை இதர சமுதாயத்தி னருக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டுள்ளது.  எங்களுக்கு அடிப்படை வசதி களான வீட்டு வரி, குடும்ப  அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாக்கடை கால்வாய், கழிப்பிட வசதி, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் அட்டை என  அனைத்து அடையாளச் சான்று கள், பி மெமோ என்கிற நிலவரி விதிப்பும் கடந்த நூறு ஆண்டுக ளுக்கு முன்பிருந்தே கொடுக்கப் பட்டுள்ளது. எங்களுக்கு இருக் கும் ஒரே சொத்து வீடு மட்டுமே,  அதையும் இடிப்பது எங்களின்  வாழ்வாதாரம், வாழ்வுரிமை யைப் பறிப்பதாக இருக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் நேரில்  கள ஆய்வு செய்து எங்கள் வீடுக ளுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட பட்டிய லின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சேபணைக்கு உரிய நிலங்க ளாக இருந்தாலும் அந்த நிலங்க ளில் வசிப்பதற்கு உரிமை வழங்க  வேண்டும் என உச்சநீதிமன்றத் தில் நடந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது இதற்கு முன்னுதாரணமாக உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சிவில் முறையீடு எண் 1132 / 2011 சிறப்பு முறையீட்டு மனு (சி) எண் 3109/2011 வழக்கில் வழங்கிய தீர்ப்பில் இந்த வழி காட்டுதல் வழங்கியுள்ளார். எனவே ஆட்சியர் இது குறித்து பரி சீலித்து எங்கள் வீடுகளை அகற் றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். வீடுகளுக்குப் பட்டா வழங்கி வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர்.