districts

img

தேர்வு செய்யப்பட்ட 37 பேருக்கு பட்டா வழங்க ஜமாபந்தியில் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 20 - பல்லடம் ஒன்றியம் மாணிக்காபுரம் கிராமத்தில் உள்ள கருப்பண்ணசாமி நக ரில் தேர்வு செய்யப்பட்ட 37  பயனாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று ஜமாபந்தி அலுவலர் முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் கோரிக்கை மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பல்ல டம் ஒன்றியக் குழுவின் சார்பிலும், மாணிக்க புரம் கிராம ஊராட்சி கிளைகளின் சார்பிலும்  வியாழனன்று, பல்லடம் தாலுகாவில் நடை பெற்ற ஜமாபந்தி அலுவலர் முகாமில், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப் பண்ணசாமி நகரில், க .ச.எண் 13/1 இல் ஏற் கனவே வீட்டுமனை பட்டா கோரி விண்ணப் பித்த 37 பயனாளிகளுக்கு, அரசு அதிகாரி களின் ஆய்வுக்குப் பின் பட்டா வழங்க தேர்வு செய் யப்பட்டனர்.   இதன் பிறகும் பட்டா வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வரு கின்றனர். எனவே உடனடி யாக தேர்வு செய்யப்பட்ட 37 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை  பட்டா வழங்க வேண்டும் என்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.  இந்த நிகழ்வில் பல்லடம் ஒன்றியச் செய லாளர் சி.முருகேஷ், மாணிக்காபுரம் கிளைச்  செயலாளர் செ.முருகேஷ், நிர்வாகிகள் மோகன், தியாகராஜன், ரங்கராஜ் கலந்து கொண்டனர்.