நாமக்கல், ஜூலை 10- மல்லசமுத்திரத்தை அடுத்த வையப்பமலை பகு தியில் உள்ள புதர் மண்டி கிடக்கும் பொது கழிப்பி டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், மல் லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை நாகர்பாளை யம் ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள் ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வையப்பமலைக்குட்பட்ட சந்தை திடலில், கருங்கல்பட்டி, மேட்டுப்பாளையம், சின்ன னம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன் படும் வகையில், அரசு சார்பில் பொது கழிப்பி டம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சந்தை திடலில் கடந்த 2019.20 ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதி மூலம் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டப்பட்ட கழிப்பி டம் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக் கள் மற்றும் சந்தைக்கு வரும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிர மத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, கழிப் பிட கட்டிடத்தை உடனடியாக பயன்பாற் டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.