districts

img

கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

தருமபுரி, பிப்.24- கிடப்பில் போடப்பட்ட தருமபுரி ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி அரசு மருத்துவமனை யில் இருந்து தருமபுரி ரயில் நிலை யம்  வரை அரை கிலோ மீட்டர்தொலை விற்கான சாலை  ரயில்வேதுறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையை டீச்சர்காலனி, இந் திரா நகர், வெண்ணாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏ.ஆர். கோட்ரஸ், குள்ளனூர் மாந் தோப்பு, நியூகாலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் கடந்த இரண்டு வருடங்களாக வாக னம் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே, இச்சாலையை உடனடியாக சீர மைக்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி நகரக்குழு சார்பில் கடந்த 3 மாதத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதையடுத்து தருமபுரி ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வேலை பாதி யில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தருமபுரி அரசு மருத் துவமனையில் இருந்து வெண் ணாம்பட்டி பிரிவு சாலை வரை சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு, சாலையில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்லும்போது மண் புகையாக பறக்கிறது. எனவே, மீதமுள்ள இச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.