இளம்பிள்ளை, ஜன.3- கொரோனா தடுப்பூசி செலுத் தாமலேயே, சான்றிதழ்களை சுகா தாரத்துறை ஊழியர்கள் வழங்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சிக்குட்பட்ட உட் பட்ட வாலிபர் ஒருவர் சென்னை யில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரண மாக அவர் தனது சொந்த மாவட்ட மான சேலத்திற்கு வந்து தற்போது வரை வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தியுள்ளார். இந்நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி ஊசி செலுத்து வதற்கு முன் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வந்துள் ளார். இதனைத்தொடர்ந்து இரண் டாவது தவணை தடுப்பூசி செலுத் துவதற்கு முற்பட்டபோது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகுடஞ்சா வடி அருகே உள்ள வைகுந்தம் பகு தியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி விட்டதாக சான்றிதழ் பதி வாகி உள்ளது. இதனால் தற்பொ ழுது இரண்டாம் தவணை தடுப்பூசி எப்படி செலுத்துவது என்று தெரி யாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இதற்கிடையே, அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வாட்சப் எண்ணிற்கு ஆதார் எண்களை அனுப்பிய பின் னர், அவர் வழங்கும் கூகுள் பே எண்ணிற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பினால் கொரோனா தடுப்பூசி செலுத்தா மல் சான்றிதழ்களும், கொரோனா பரிசோதனை செய்யாமல் நெகட் டிவ் சான்றிதழ்களும் வழங்கப் பட்டு வருவதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதேபோன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளி லும் தடுப்பூசி செலுத்தாமல் சான் றிதழ்களை வழங்கி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். (ந.நி)