உடுமலை, நவ.5- உடுமலை அருகே உள்ள ஜம்புக் கல் மலையை பாதுகாக்கபட்ட வனப் பகுதியாக வகை மாற்றம் செய்து, மலை வாழ் மக்கள் வாழ்விடமாக மாற்ற வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி யில் சுமார் 2920 ஏக்கர் பரப்பளவு மலைப் பகுதியில், விவசாயிகள் பயன்படுத் தும் வகையில் சமதள நிலத்தை 1970 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சுமார் 300 குடும்பத்திற்கு நிபந்தனை பட்டா வழங்கபட்டது. இதன்பின் பல ஆண்டு கள் மழையில்லாமல் போனதால் ஜம் புக்கல் மலை பகுதியிலிருந்து விவசாயி கள் வெளியேறினர். இதை பயன்படுத்தி தற்பொழுது தனி நபர்கள், தன்னுடைய பெயரிலும் தனது குடும்பத்தின் பெய ரிலும் ஆவணம் தயாரித்து மலைப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத் தின் சார்பில் தமிழக முதல்வர், வரு வாய்த்துறை, வனத்துறை அதிகாரிக ளுக்கு மனு அளித்தும், பல கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆண்டிய கவுண்டனூர் கிராம நிர்வாக அலுவ லகத்தில் ஜம்புக்கல் மலைப்பகுதியில் ஆக்கிரப்பு குறித்து பட்டா வைத்துள்ள நபர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற் றது. இந்நிலையில், வருவாய்த்துறை யின் கட்டுபாட்டில் இருக்கும் மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனத் துறையாக வகைமாற்றம் செய்ய வேண் டும். மேலும், மலைப்பகுதியை பாது காக்கும் வகையில் அமராவதி பகுதி யில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கள் குடியிருப்பு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.