திருச்சிராப்பள்ளி, நவ.15- கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனைக்கு பாதை வசதி செய்து தர வேண்டும். கடலூர் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். கடலூர் ரயில் நிலையத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என பெயர் மாற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பான்பரி வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாழனன்று தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜாய்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மாதவன், கடலூர் நகர செயலாளர் அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆளவந்தார் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் பக்கீரான் குரு ஆகியோர் திருச்சி கோட்ட மேலாளர் அஜாய்குமாரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.