districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 4- தேசிய தேர்வு முகமையில் நடைபெறும் குளறுபடிகளை  கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய  மாணவர் சங்கம் சார்பில் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேசிய தேர்வு முகமையை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து  செய்யக் கோரியும், இடதுசாரி மாணவர் அமைப்புகள் நாடு  தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விட்டிருந்து. அதன்  அடிப்படையில் திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர்  விமல்ராஜ் தலைமையில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார், மாவட் டத் தலைவர் கல்கி ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சுஜிதா, மாவட்டக் குழு  உறுப்பினர் நிஷா, கிளைச் செயலாளர் கண்ணன் உட்பட 80க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட னர்.

ஒன்றிய அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

திருப்பூர், ஜூலை 4-  ஒன்றிய அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்து வழக்கறி ஞர்கள் தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளில்  புதனன்று நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்‌.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களை யும் திரும்ப பெற வலியுறுத்தி, தாராபுரம் நீதிமன்ற வளாகத் தில் இருந்து கச்சேரி சாலை காவல் நிலையம் வழியாக பேர ணியாக வந்த வழக்கறிஞர்கள் தலைமை தபால் நிலையம்  முன்பு ஒன்று திரண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங் கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு மூன்று குற்ற வியல் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல்லடத்தி லும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேம்பாட்டு பணிகள் ஆய்வு

திருப்பூர், ஜூலை 4- தாராபுரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி களை நகர்மன்றத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 6 ஆவது  வாா்டு பகுதிகளில் மழைநீர்  வடிகால், சிறுபாலம் மற்றும்  சாலை ஆகியவை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் கு. பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறி வுறுத்தினார்.

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்: 29.29 / 60அடி 
நீர்வரத்து: 3 கனஅடி
நீர் திறப்பு: 28 கனஅடி