districts

img

“தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம்”

சேலம், பிப்.21- “தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்” என்ற பாரதி யின் எண்ணப்படி, தமிழக சாலை கள், தெருக்களில் பிறமொழி கலக்காத செம்மைப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என பெரி யார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பாடத்திட்ட வல்லுநர்க்குழு  உறுப்பினர் தாரை அ.குமரவேலு  வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயி லரங்கம், கருத்தரங்கம் இரண்டு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடந்த இந்நிகழ்வில், பெரி யார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பாடத்திட்ட வல்லுநர்க் குழு உறுப்பினர் தாரை அ.குமரவேலு கலந்து கொண்டு “ஆட்சி மொழித் திட்ட செயலாக்கம்” பற்றி சிறப் புரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில்,  எந்தவொரு மக்களின் பாரம்பரி யமான கலாச்சாரம், அவர்களது மொழியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின் றது.

எனவே, மொழியின் அழிவு, கலாச்சாரத்தின் இருப்பை கேள்விக் குறியாக்கிவிடும். தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல், தூய  தமிழ் மொழியை கலப்படமாக்கி உள்ளது. இவ்வாறான சவால்களை தமிழ்மொழி எதிர்நோக்குவதனால் தாய்மொழியை பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இது நமது தலையாய  கடமை என்பதை மனதில் கொள்ள  வேண்டும். மக்களின் மொழி வழி ஆட்சியில் தான், அவர்களின் விருப் பம் ஆள்வோரைப் பிணைக்க வல்ல தாக இருக்க முடியும்.  “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”  என முழங்கி தமிழ்நாட்டின் முதல மைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, சென்னை மாகாணத் துக்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டினார். தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றம் நிறைவேற்றியது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு ஜன வரி 23 ஆம் நாள் தமிழ்நாடு அரசித ழில் வெளியிடப்பட்டு நடைமு றைக்கு வந்தது.

1968 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சி இயக்கம் என்ற  அமைப்பு உருவானது. இதனால்  தமிழ் அலுவலக மொழியாக செம் மையாக பயன்படுத்தப்பட்டது. ஆட்சிச்சொல் அகராதி பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை மொழிபெயர்த்தல், புதிய கலைச் சொற்களை படைத் தல் என பல்வேறு முறைகளில் தமிழ் அலுவல் மொழியாக சீரமைக் கப்பட்டது. மேலும், பல புதியன புகுத்தி மறு பதிப்புகளும் வந்து கொண்டுள் ளன. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டுமானால், முதலில் கல்லூரி களில் பட்டப்படிப்பில் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும். இரண் டாவது, உயர் அதிகாரிகள் தமிழ் படித்தவர்களாக மட்டுமல்லாமல், தமிழின் மூலம் படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அண்ணாமலை  பல்க லைக் கழகம் பொறியியலை தமிழ் வழியில் கற்பிக்கும் என்ற செய்தி தேனாய் இனிக்கிறது.  1942 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மொழிக் கிளர்ச்சியின்போது,

பாவேந் தர் தீட்டிய “தமிழியக்கம்” என்னும் நூல் தமிழ் வளர்ச்சிக்கும், ஆட்சி மொழித் துறைக்கும் கையேடு எனும் படியும், அடிப்படை வரைபடம் எனும் படியும் அமைந்தது. “தெருவெங் கும் தமிழ் முழக்கம் செய்தல் வேண் டும்” என்றார் பாரதி. மொழிவழி மாநிலம் பிரிந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழக சாலைகள், தெருக்களில் செம்மைப்படுத்தப் பட்ட தமிழ்ப் பெயர்கள் இல்லவே இல்லை. பிறமொழி கலந்த பிழை யான தமிழ்ச் சொற்களே எழுதப் பட்டு வருகிறது என்ற இந்த நிலை மாற வேண்டும். அப்பொழுது தான்  தமிழ் முழு வளர்ச்சி அடையும். இவ் வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்விற்கு வந்தோரை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் க.பவானி வரவேற்றார். சேலம் அரசுக் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.சாந்தி, மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் திர ளானோர் கலந்து கொண்டனர்.