districts

img

சிபிஎம், வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.23- சேலம், சின்னேரி வயக்காடு பகுதியில் சேதமடைந்து காணப் படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியு றுத்தி சிபிஎம், வாலிபர், மாதர்  சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி, 26 ஆவது  வார்டுக்குட்பட்ட சின்னேரி வயக் காடு பகுதியில் 20க்கும் மேற்பட்ட  சாலைகள் அனைத்தும் குண்டும்,  குழியுமாக உள்ளது. பொதுமக்கள்  செல்லும்போது உயிர்பலி ஏற் படக்கூடிய அளவிற்கு சாலைகள்  மிகவும் மோசமாக உள்ளன. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநக ராட்சி அலுவலகத்தில் பலமுறை  புகார் தெரிவித்தும், மனு வழங்கி யும் உள்ளனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தை கண் டித்தும், சாலைகளை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என வலி யுறுத்தியும் சின்னேரி வயக்காடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து நூதன முறையில், மனித உயிரை பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க  மாநகரச் செயலாளர் குரு பிரசன்னா, மாதர் சங்க மாநகரச் செயலாளர் ரம்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, ஆவேச முழக்கங்களை எழுப்பி னர்.  மேலும், இதன்பிறகும் மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளை சீர் செய்யவில்லை யென்றால், பொதுமக்களை ஒன்று  திரட்டி மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்படும் என, போராட் டக்காரர்கள் தெரிவித்தனர்.