districts

img

மீண்டும் திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனை

தருமபுரி, பிப்.11- பாலக்கோட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மகப்பேறு மருத்துவமனை திறக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலை யம் அருகே ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப் பில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மகப் பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர் கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனை செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மருத்துவம னையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். இதையடுத்து மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள், டெக்னீசியன்கள் ஆகியோரை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு மகப்பேறு மருத்துவ மனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீண் டும் திறக்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட  சுகாதாரபணிகள் இணை இயக்குநர் சாந்தி,  பாலக்கோடு அரசு தலைமை மருத்துவமனை  முதல்வர் பாலசுப்ரமணியம் மற்றும் செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.