districts

img

நாமக்கல்: தேசிய கீதத்திற்கு அவமரியாதை செலுத்திய

நாமக்கல், ஜன.31- நாமக்கல்லில் அரசு விழா நிறைவில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதத்திற்கு அவமரியாதை செலுத் திய சிறப்பு காவல் உதவி ஆய்வா ளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கலைச்செல்வன் உத்தர விட்டுள்ளார். நாமக்கல்லில் கடந்த ஜன.28 ஆம் தேதியன்று மாவட்ட நிர்வா கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மை குட்டை மேட்டில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், புதிய பணிகளுக் கும் அடிக்கல் நாட்டினார். இங்வி ழாவில் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழா நிறைவு பெற்றதும் தேசிய கீதம் ஒலிக்கப் பட்டது. அப்போது பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  சிவப்பிரகாசம் என்பவர், நாற்காலி யில் அமர்ந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதன் பின் அலட்சியமாக எழுந்து நின் றார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பர வியது. இதனைப்பார்த்த சக போலீ சார், உயர் அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், சிவப்பிரகாசத்தை நேரில் அழைத்து விசாரணை நடத் தினார். விசாரணைக்கு பின்னர்  தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்ததாகக்கூறி சிவப்பிரகா சத்தை பணியிடை நீக்கம் செய்து கலைச்செல்வன் உத்தரவிட்டார். ஏற்கனவே சிவப்பிரகாசம் வேல கவுண்டம்பட்டி காவல் நிலையத் தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைய டுத்து அவர் நாமக்கல் மாவட்ட ஆயு தப்படையில் தற்போது பணியாற்றி  வந்த நிலையில், மீண்டும் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;