districts

img

மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் அகற்றம்

கோவை, பிப்.18- கோவை மேம்பால தூண்களில் ஒட் டப்படும் சுவரொட்டிகள் அகற்றும் பணி யில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.  கோவை - அவினாசி சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில்  உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இதனை கருத் தில் கொண்டே சில வருடங்களுக்கு முன்பு ஆறு வழிச் சாலையாக மாற்றப் பட்டது. இருந்த போதும் போக்குவரத்து  நெரிசல் குறையவில்லை. இதையடுத்து போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்தவும், போக்கு வரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலம்  10.10 கி.மீ நீளத்தில், ரூ.1,621.30 கோடி  மதிப்பீல் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலி பாளையம் வரை அமைக்கப்படுகிறது. தற்போது பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தூண்களில் ஓடுதளம்  அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற  வருகிறது. இந்நிலையில், சுவர் விளம்பரங் களை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை  கோவை மாநகராட்சி எடுத்து  வருகிறது. முதல் கட்டமாக காந்திபுரத் தில் உள்ள உயர்மட்ட மேம்பால தூண் களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இத்தூண் களில், தமிழர்களின் பாராம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங் கள் வரையப்படுகிறது. இதையடுத்து, அவினாசி மேம்பால  தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும்  பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.  மேலும், சனியன்று குடியரசு தலை வர் வந்த நிலையில், தூண்களில் தூய்மை பணி நடைபெற்றது. சாலை யின் நடுவே உள்ள தடுப்புகள், அவி னாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் வண்ண மாயமாகி வருகிறது.