districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ரூ.3.40 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

கோவை, ஜன.7- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இரண்டு ஷெட்டுகளை அகற்றி நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப் புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில், அனுமதியின்றி வைக் கப்பட்டுள்ள பேனர்கள், ஷெட்டுகள் போன்றவைகளை அதிகாரிகள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 20ஆவது வார்டிற்குட்பட்ட பிபிசி காலனியில் உள்ள  பொது ஒதுக்கீட்டு இடத்தில் இரண்டு ஷெட்டுகள் வெள்ளி யன்று மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி உள்ளனர்.   மீட்கப்பட்ட இடம் 22 சென்டாகும். மேலும், இதன் மதிப்பு ரூ.3.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வழிகாட்டும் தொழிற்சங்க ஊழியர்

தோழர் எஸ்.நாராயணசாமி

1970களின் இறுதியில் சேரன் போக்குவரத்து கழகத் தொழி லாளர்கள் உணர்வில் புதிய வேகம்  பாய்ச்சியவர் தோழர் எஸ்.நாராயணசாமி. தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் சென் னையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து  வந்தார். 1970களின் துவக்கத்தில்  தமிழ்நாடு அரசு தனியார் பேருந்து களைத் தேசியமயமாக்கியது. தமிழ கத்தில் கோவையைத் தலை மையிடமாகக் கொண்டு சேரன் போக்குவரத்துக் கழகம் பிறந்தது.  அரசு போக்குவரத்துத் துறை யில் இருந்து தோழர் எஸ்.நாராயண சாமி சேரன் போக்குவரத்துக் கழ கத்தில் ஓட்டுநராகப் பணியமர்த்தப் பட்டார். அந்தக் காலகட்டத்தில் சேரன் கழக நிர்வாகம் தொழிலா ளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்தியது. தொழிலாளர்கள்  மேலாளர்களைச் சந்திக்க வெறுங் கால்களுடன் அறைக்குள் போக  வேண்டும். அங்கே நாற்காலி இருக்கும். ஆனால் தொழிலாளர் கள் அதில் அமரக் கூடாது.  கோரிக்கைகளும், ஓய்வறை களில் உள்ள கிழிந்த பாய்களை மாற்றிப் புதிய பாய்கள் கேட்பது, கழிப்பறைகளில் உடைந்துபோன டப்பாக்களை மாற்றி வேறு டப்பாக் கள் தரச் சொல்வது, மூட்டைப் பூச்சி மருந்து அடிக்கச் சொல்வது போன்ற அற்பக் கோரிக்கைகள் தான் இருக்கும். அதைக் கூட  மனது வைத்தால் தான் நடக்கும்.  அலுவலகத்திற்குப் பணம் கட்ட  பேருந்தில் வரும் போது நடத்துநர்  தன் சொந்த காசில் பயணச்சீட்டு  வாங்கியாக வேண்டும். தொழிலா ளர்களுக்கு தொழிற்சங்கம் எதுவும்  இல்லை. ஆனால் அதிகாரிகளே 13/CBE என்ற எண்ணில் ஒரு சங் கத்தைப் பதிவு செய்து வைத்துக் கொண்டார்கள். தொழிலாளர்கள் அதில்தான் சேர வேண்டும். வேறு  சங்கம் அமைப்பதைப் பற்றி  பேசினால், அவர்மீது அடியாட்கள்  தாக்குதல் நடத்துவார்கள். இட மாறுதல், பணி நீக்கமும் செய்யப் படுவார். பேரவைக் கூட்டத்தில், தொழிலாளர்கள் எதுவும் பேசக் கூடாது.

அதிகாரிகள் சங்கத் தலை வர்களின் பட்டியலை அறிவித்து விட்டு, கூட்டத்தை முடித்து விடு வார்கள்.  இந்நிலையில், தோழர் எஸ். நாராயணசாமியும், சில தோழர் களும் சிஐடியு மாநில தலைவர்  தோழர் கே.ரமணியை சந்தித் தார்கள். அதிகாரிகள் முன்மொழி யும் தலைவர்கள் பட்டியலுக்குப் போட்டியாக, மாற்று அமைத்து கள மிறங்குமாறு வழிகாட்டினார்.  அந்த ஆண்டில், பேரவைக் கூட்டத்தில், வழக்கம் போலவே எல்லாம் முடிந்து விடும் என்று அதிகாரிகள் எண்ணினார்கள். ஆனால் சங்கத் தலைவர்களின் பட்டியலை அதிகாரிகள் வாசித்த போது, நாராயணசாமியும், தோழர் களும் எழுந்து தாங்கள் போட்டியிடு வதாக அறிவித்தார்கள். அதிகாரி கள் ஆடிப்போய் விட்டார்கள்.  போட்டியைத் தவிர்க்க எத்த னையோ சாகசங்களைச் செய்து  பார்த்தார்கள். எதுவும் எடுபட வில்லை. தேர்தல் நடந்தது, வாக்கு எண்ணிக்கையும் முடிந்தது. தோழர் எஸ்.நாராயணசாமி அணி வரலாற்றில் முதன் முதலாகப் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றது.  சிறிய எண்ணிக்கைக்குத் தலைமை தாங்கி, அடுத்த சில  ஆண்டுகளிலேயே ஆயிரத்திற்கும்  மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாக வார்த்தெடுத் தார். அத்துடன் நில்லாது, தன் வாழ் நாள் முழுவதும் அனைத்துப் பகுதி  உழைக்கும் மக்களின் முன்னேற்றத் திற்காக அயராமல் பாடுபட்டார்.  ஒரு தொழிற்சங்க ஊழியர் எப்படி செயலாற்ற வேண்டும் என்ப தற்கு இலக்கணமாக இருந்து, பல  நூற்றுக்கணக்கான இளம் ஊழியர் களை உருவாக்கினார். இன்று (ஜன.8) அவரது நினைவு  நாள். அவருடைய லட்சியங்களை நெஞ்சில் ஏந்துவோம், அவர் விட்டுச் சென்ற பணிகளை உறுதி யுடன் செய்து முடிப்போம். -ப.மாரிமுத்து பொது செயலாளர்,  அனைத்து வகை தொழிலாளர் ஐக்கிய தொழிற்சங்கம்,ஈரோடு.

குட்கா விற்பனை: 2 பேர் கைது

கோவை, ஜன.7- கோவை, வெரைட்டி ஹால் சாலை போலீசா ருக்கு எம்என்ஜி வீதி பகுதி யில் உள்ள ஒரு மளிகைக்  கடையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற் பனை நடைபெறுவதை அறிந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  இதில், 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடு பட்ட ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த நரேஷ் சிங்  (29), கல்கத்தாவைச் சேர்ந்த  ஸ்ரீகாந்த் (38) ஆகிய இரு வரையும் கைது செய்தனர்.

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் எதிரொலி பன்றி பண்ணையில் தீவிர கண்காணிப்பு

கோவை, ஜன.7- நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்பி ரிக்கா பன்றி காய்ச்சல் காரணமாக ஏராளமான காட்டு பன்றிகள் உயிரிழந்தன.  இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணை கள் கால்நடை துறையினர் தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர்.  இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து  கோவையில் உள்ள 39 பன்றி வளர்ப்பு பண்ணைகளை தீவிர மாக கண்காணித்து வருகிறோம். பன்றி வளர்ப்பு பண்ணை  உரிமையாளர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி  உள்ளோம். ஏதாவது பன்றிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்தால் அது குறித்து தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளோம். இதை தவிர கால்நடை நோய் புலனாய்வு பிரிவினருக்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் ஒரு பன்றியில் இருந்து  மற்றொரு பன்றிக்கு பரவும், பன்றியிலிருந்து மனிதனுக்கு அல்லது மற்ற கால்நடைகளுக்கும் பரவாது எனவே பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றனர்.

3 அடி நீள பாம்பு பிடிபட்டது

பள்ளிபாளையம், ஜன.7- பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் சாதுர்யமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - சங்ககிரியை இணைக்கும் சாலையில், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரே, தனியாருக்கு சொந்தமான டிபார்ட் மெண்ட் ஸ்டோர் குடோனில் சுமார் மூன்று  அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந் துள்ளது. இதுகுறித்து வெப்படை தீய ணைப்பு நிலைய அலுவலர் செங் கோட்டுவேலுக்கு பொதுமக்கள் தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், சுமார்  ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு, நல்ல  பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர். தற்போது குளிர் காலம் மற்றும் மழைக்காலம் என்பதால், மக்கள் குடியிருப்பு பகுதியில் விஷ உயிரினங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்போடு இதுபோன்ற விஷ உயிரினங்களை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் கேட்டுக்கொண்டனர்.

முத்திரையிடாத தராசு, எடை கற்கள் பறிமுதல்

பென்னாகரம், ஜன.7- பென்னாகரம் மீன் சந்தை யில் தொழிலாளர் நலத் துறை சார்பில் முத்திரை யிடாத நான்கு தராசு, எடைக் கற்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மீன்  சந்தை யில் மீன்கள் எடை போடும் தராசுகள் அரசு முத்திரை இல்லாமல் உள்ளதாக தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல்  கிடைத்தது. தகவலின் அடிப் படையில் தொழிலாளர்கள் நலத்துறையினர், மீன் சந்தை யில் தராசு மற்றும் எடை  கற்களை ஆய்வு மேற் கொண்டனர். இதில் அரசு முத்திரையின்றி உள்ள எடைக்கற்கள், தராசுகளை பறிமுதல் செய்து விசா ரணை செய்தனர்.