districts

img

அரசு பள்ளி முன்மிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பள்ளிபாளையம், ஜன.23- குமாரபாளையத்தில் அரசு பள்ளி முன்பு இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம், குமாரபாளையம் சாலை, ஒட்ட மெத்தை என்ற பகுதி அருகே அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1400க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். இந்நி லையில் அரசுப் பள்ளியை மேம்படுத் தும் வகையில்,  பள்ளி கட்டிட சுற்றுச்சு வரை உயரபடுத்துவது உள்ளிட்ட பல் வேறு பணிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளியின் வளாக முன் பகுதியை, ஒரு சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தொடர்ந்து, சமூக நல ஆர்வலர் களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.  இதையடுத்து பள்ளிபாளையம் நக ராட்சி (பொ) ஆணையர் ரேணுகா உத் தரவின் பேரில், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன் முன் னிலையில், பள்ளிபாளையம் நகராட்சி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக் கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற் றது. ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற் றப்பட்டு, தொடர்ந்து வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் கண் காணிப்பு மேற்கொள்ளப்படும் என நக ராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.