கோவை, ஜன.24- கோவை தடாகம் பகு தியில் யானை தடுப்பு அக ழிக்குள் இருந்த ஒரு டன் குப்பைகளை வனத்துறை யினர் அகற்றினர். கோவை வனச்சரகத் திற்குட்பட்ட கணுவாயை அடுத்த தடாகம் வனப் பகுதியை ஒட்டியுள்ள திரு வள்ளுவர் நகர் பகுதியில் யானை தடுப்பு அகழிக் குள் பிளாஸ்டிக் உள்ளிட்ட வீட்டு உபயோக குப்பைகளை பொது மக்கள் கொட்டியிருந்தனர். இதைய டுத்து, கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையில் வனப் பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடு பட்டனர். சுமார் ஒரு டன் அளவிற்கு குப்பைகள் சேகரித்து நஞ்சுண்டா புரம் ஊராட்சி மூலம் அப்புறப்படுத்தி னர். இதன்பின், குப்பைகளை அகழி யில் கொட்டக்கூடாது என அப்பகுதி பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். முன் னதாக, இப்பணியில் வனவர் அருண் சிங், வனக்காப்பாளர்கள் கார்த்தி கேயன், காமேஷ், செல்வக்குமார், வனக்காவலர் கபில்ராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.