districts

img

நினைவு வேந்தல் கூட்டம்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவு வேந்தல் கூட்டம் சனிக்கிழமையன்று (ஆக.10) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி, எஸ்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.