மேட்டுப்பாளையம், அக்.1- வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேட்டுப் பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சேகரித்து வழங்கினர். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட பேரிடரில், பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது. வயநாடு மக்களின் துயரத்தில் நாங்கள் உடன் நிற்கிறோம் என நாடு முழுவதும் பல்வேறு அமைப் பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத் தினர் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர்கள் அமைப்பினர் இணைந்து, சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான மருந்து மாத்திரைகள், உணவுப் பொருட்கள், உடைகள், பாத் திரங்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை திங்களன்று வயநாட்டிற்கு சென்று வழங்கினர். இதில், மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலா ளர் சங்கத்தினர் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர்கள் பாஷா, ஆனந்தன், தமிழகம் சேட், இதயத் துல்லா, ஷானவாஸ். சாமுவேல், ஹபிபுல்லா, மகாலிங் கம். பஷீர் அகமது. சதாம் உசேன், முகமது தஸ்லீம், நாகராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் வினோத், வய நாடு சிஐடியு தலைவர் சகதேவன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.