கேரளா மாநிலம், வயநாடு பேரிடர் நிவாராண நிதியாக, தமிழ்நாடு அரசு கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில், ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்தை, மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.மனேகரன், துணைத்தலைவர் பெ.மாது ஆகியோர் புதனன்று வழங்கினர். கேரளா ஓய்வுபெற்ற அரசுக்கல்லூரி ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் முகமது குஞ்சு ஆகியோர் உடனிருந்தனர்.