districts

img

10 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசிகளை விடுதலை செய்

மேட்டுப்பாளையம், மார்ச் 17- 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக் கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடு தலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து மேட்டுபாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக சிறைச்சாலைகளில்  பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தண் டனை காலத்திற்குப் பின்பும் முஸ்லிம் கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அதேபோல குற்ற விசாரணை யில் குற்றம் நிரூபிக்கப்படாமல் அல்லது விசாரணையின்றி பல ஆண்டுகளாக முஸ் லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில்  இதுபோன்று சிறையில் இருக்கக்கூடிய முஸ்லிம் சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தோர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரு கின்றனர். இவர்களின் கோரிக்கைக்கு ஆதர வாக முற்போக்கு, ஜனநாயக அமைப்புக ளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்தொடர்ச்சியாக, கோவை மேட்டுப் பாளையத்தில் கருணையின் அடிப்படையில் பத்தாண்டுகளுக்கு மேலான சிறைவாசி களை  விடுதலை செய்யக்கோரி சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளை யம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சித்திக் தலைமை ஏற் றார். பொதுத்தொழிலாளர் சங்கத்தின் நிர் வாகிகள் சாமுவேல், டி.பி.காளீஸ்வரன், ஆனந்தி, கனகாமணி, ஷாநவாஸ், முகமது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, தாலுகா செயலாளர் பாஷா ஆகி யோர் உரையாற்றினர். இதில், ஏராளமா னோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.