திருப்பூர், ஏப்.2 - தாராபுரம் உப்பாறு அணையிலிருந்து 6,060 ஏக்கர் நிலங்களுக்கும், பாசன பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால் நடைகளின் குடிநீர் தேவைக் காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், உப்பாறு அணையிலிருந்து 6,060 ஏக்கர் நிலங்க ளுக்கும், பாசன பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீரை திறந்து விடப்பட்டது. செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு முதல மைச்சர் உத்தரவிக்கிணங்க, உப்பாறு அணையிலிருந்து வலது கரை மற்றும் இடது கரை கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற் குட்பட்ட 6,060 ஏக்கர் நிலங்களுக்கும், பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், இன்று (ஞாயிறன்று) முதல் ஏப்.10 தேதி வரை, மொத்தம் 130.99 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக் கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி வழங் கப்பட்டுள்ளது. தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப் படும் என்றும், இதன் மூலம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள 6,060 ஏக்கர் பாசன பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயனடைவார்கள் என்றும், விவ சாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் படியும் கேட்டுக் கொண் டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்பீம், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.