ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கோவை, நவ.20- பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இரண் டாம் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழி யார் அணையில் இருந்து 5 பழைய வாய்க்கால்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத் திற்கு புதனன்று முதல் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முடிய உள்ள 146 நாட்களுக்கு 1089 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயகட்டு பாசனத்தில் மொத்தம் உள்ள 22,116 ஏக்கர் பாசன பரப்புள்ள பூமி களுக்கு புதனன்று முதல் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் நான் காம் தேதி வரையிலும் உள்ள 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2709 மில்லியன் கன அடிக்கு மிகா மலும் தண்ணீர் விட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு புத னன்று காலை 10 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப் பட்டது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தீரின் சரண்யா, செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன், உதவி பொறியாளர் கோகுல் கார்த்தி மற்றும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயி கள் கலந்து கொண்டனர்.
குட்கா விற்பனை: 643 கடைகளுக்கு ‘சீல்’
குட்கா விற்பனை: 643 கடைகளுக்கு ‘சீல்’ சேலம், நவ.20- சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் பள்ளி களின் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 643 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், மாநகரப் பகுதிகளில் தடை செய் யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். மேலும், உணவுப் பாது காப்பு அலுவலர்கள் அந்த கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். அப்போது, கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் உரிமையாளர்க ளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, மாவட்டத் தில் கடந்த 7 மாதங்களில் 8,400 கடைகளில் சோதனை நடத்தப்பட்டன. அதில், 643 கடைகளில் தடை செய்யப் பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய் யப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அங்கிருந்து, ரூ.41 லட்சம் மதிப்பிலான 4 டன் புகையிலைப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, 643 கடை களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் கூறுகையில், கடந்த 7 மாதங்களில் தடை செய்யப் பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 643 கடை உரிமையாளர்களுக்கு ரூ.1.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள கடைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது, அங்கு புகையிலை விற்பது கண்டறியப்பட்டால் உடன டியாக அந்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, தெரிவித்தனர்.
போலி ஆவணம் மூலம் சொத்துகளை விற்க முயற்சி
கோவை, நவ.20- போலி ஆவணங்கள் மூலம் சொத்து களை விற்க முயற்சியில் ஈடுபட்டவரை போலீ சார் கைது செய்தனர். பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்ற சங்கமானது கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆபிரகாம் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பிற்கு பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இந் நிலையில், சங்கத்திற்கு எவ்விதத்திலும் சம் பந்தமில்லாத கோவை, வீரகேரளம் பகுதி யைச் சேர்ந்த கமலேஸ்வரன் (43) என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு போலி ஆவணங் களை தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத் தில் கொடுத்து, கிரம்மர் சாண்டகிரன் பவுண் டேசன் பேரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப் பிலான சொத்துகளுக்கு தான் பொறுப்பா ளர் என கமலேஸ்வரன் அறிவித்து கொண் டார். பின்னர் அந்த சொத்துக்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து தமிழகம் முழு வதும் பலரிடமும் பல கோடி ரூபாய் பணத்தை முன் பணமாக பெற்று அந்த சொத்துக்களை கிரையம் செய்து தருவதாக மோசடி செய்து வந்தார். இதுகுறித்து புகார் வந்த நிலையில், கமலேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளி கள் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கமலேஸ் வரன் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி தலைமறைவாக இருந்து வந்தார். இருப்பி னும் தொடர்ந்து கமலேஸ்வரன் மற்றும் அவ ரது கூட்டாளிகள் போலியாக தயாரித்த தொண்டு நிறுவனத்தின் சீல்கள், ஆவ ணங்கள் மூலம் கிரம்மர் சாண்டகிரன் பவுண் டேசன் சொத்துக்களை விற்க முயற்சி செய்து வந்தனர். இதற்கிடையே கிரம்மர் சாண்டகிரன் பவுண் டேசனுக்கு சொந்தமான கோவை இஸ்மா யில் ராவுத்தர் வீதியில் உள்ள இடத்தை போலி ஆவணங்கள் மற்றும் ரப்பர் ஸ்டாம்புகளை தயாரித்து விற்க முயன்ற வழக்கில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கமலேஸ் வரன் மற்றும் அவனது கூட்டாளி வின்சென்ட் வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த னர். இந்நிலையில் கொடைக்கானலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கமலேஷ்வரன் மற் றும் அவனது கூட்டாளி திண்டுக்கல் மாவட் டத்தைச் சேர்ந்த மரியராஜ் ஆகிய இருவரை யும் போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலேஸ்வர னிடம் கொடைக்கானல் வழக்கிற்கு கைது செய்வதற்கான உத்தரவை வழங்கினர்.
தீ விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு
கோவை, நவ.20- கணபதி அருகே துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்கனவே பெண் ஒருவர் உயிரி ழந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி (85) என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இல் லத்திற்கு துக்கம் விசாரிக்க உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராத வகையில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனையடுத்து, ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்ட போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், பத்மாவதி, பானுமதி, ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகிய நான்கு பேர் சிக்கிக்கொண் டனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், வழியிலேயே பத்மா வதி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பானு மதி (55) மற்றும் ராஜேஸ்வரன்(53) இருவரும் சிகிச்சை பலனின்றி புதனன்று உயிரிழந்துள் ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
7 ஆடுகள் பலி: சிறுத்தை தாக்கியதா?
7 ஆடுகள் பலி: சிறுத்தை தாக்கியதா? ஈரோடு, நவ.20- கோபி அருகே அடையாளம் தெரியாத விலங்கு தாக்கிய தில் 7 ஆடுகள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத் துள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் பூங்கரைபுதூா் பகுதி யைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் விவசா யம் செய்வதோடு கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந் நிலையில், வழக்கம்போல தனது ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு திங்களன்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுச் செல்வ தற்காக செவ்வாயன்று வந்து பார்த்தபோது, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நம்பியூர் காவல் துறையினருக்கு சக்திவேல் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர். டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆடுகளை கொன் றது சிறுத்தையா? நாய்களா? என்பது குறித்து வனத்துறை யினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய முடிவுப்படி நவ.26இல் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், நவ. 20 - திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங் கங்கள், விவசாயிகள் சங்கம் மற்றும் மாதர், இளைஞர், மாணவர், கலை இலக்கிய அமைப்புகளின் மாவட்ட அளவிலான கூட்டம் ஊத்துக்குளி ரோடு ஏஐடியுசி மாவட்ட அலுவ லகத்தில் நடைபெற்றது. திங்களன்று ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நட்ராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், எல்.பி.எப். மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, ஐஎன் டியுசி மாவட்டச் செயலாளர் அ.சிவசாமி, எச் எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.முத்து சாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், ஏஐஎஸ்எப் நிர்வாகி முத்துக்குமார், இந்திய தேசிய மாதர் சம்மே ளனத்தின் மாவட்டச் செயலாளர் நதியா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.காதர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய மோடி அர சின், ஜனநாயக விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26இல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டம் நடத்துவது என்று அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் குமரன் சிலை அருகில் மாபெ ரும் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்து வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உயிர் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
உயிர் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் அவிநாசி, நவ.20- மானியத்தில் வழங்கும் உயிர் உரங்களை பயன்படுத்தி, விளைச்சலை அதிகரிக்க வேளாண்மைத் துறையினர் விவசா யிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியிருப்பதாவது, மண்ணில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஸ் பாக்டீரியா உள்ளிட்டவை இயற்கையாகவே உள் ளன. மேலும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் மற்றும் தேசிய எண்ணெய் வித்து இயக்கம் ஆகியவை சார்பில் உயிர் உரங்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண்மைத் துறை வழங்கி வரு கிறது. இந்த உயிர் உரங்களில் அசோஸ்பைரில்லம், லைசோ பியம் உள்ளிட்டவை உயிரிகள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துகிறது. பாஸ்போபாக்டீ ரியா உயிரிகள் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் உரங் களை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றி தருகிறது. பொட்டாஷ் நகர்வு பாக்டீரியா உரத்தின் நகர்வு தன்மையை மேம்படுத்தி பொட்டாஸ் வேர் பகுதியில் கிடைக்க உதவுகி றது. இந்த உயிர் உரங்களால் மண்ணில் பயன்பாடு அதிகரிக்க செய்வதுடன், உரங்களின் தேவையும் குறைந்து பயிர் விளைச் சலும் அதிகரிக்கிறது. எனவே இந்த உரங்களை சொட்டு நீர் மூலமாக கலந்து விடலாம், பாத்தி முறையில் வாய்க்கால் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாய குப்பை யில் கலந்து சொட்டு நீர் பாசனம் செய்யலாம். மேலும் ஆலோச னைகளுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனக் குறிப் பிட்டுள்ளார்.
குந்தா அணையில் அடிப்புற கதவு வழியாக தண்ணீர் திறப்பு
குந்தா அணையில் அடிப்புற கதவு வழியாக தண்ணீர் திறப்பு உதகை, நவ.20- கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்க பாதை யில் சகதி சேராமல் இருக்க, குந்தா அணையில் சகதியுடன் கூடிய தண்ணீர் ஸ்கோர் வென்ட் எனப்படும் அடிப்படை கதவு வழியாக திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்க ளின் கீழ் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன் படி அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைகாரா உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண் ணீரை கொண்டு நீர்மின் நிலையங்களில் தினமும் 834 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. குந்தா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர் பவானி அணை யில் இருந்து அவலாஞ்சி நீர்மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் மின் உற்பத்திக்கு பிறகு அவ லாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப் படுகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குந்தா நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கி ருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும். பின்னர் குந்தா அணையில் உள்ள சுரங்கப் பாதை வழியாக கெத்தை நீர்மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் அங்கிருந்து வெளியேற் றப்படும் தண்ணீர் பரளி மின் நிலையத்துக்கு கொண்டு செல் லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படு கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு குப்பை நீர்மின் திட்டத்திற்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த பத்து நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீ ரால் குந்தா அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிட் டது. இவ்வாறு வந்த தண்ணீர் வழியோரமாக இருந்த மரங்கள், செடி கொடிகள், பாறைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மண்ணை அடித்து வந்ததால் அணை முழுவதும் சகதி சேகர மாகியுள்ளது. எனவே குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு செல்லும் சுரங்கப்பாதையில் வழக்கம்போல் தண்ணீரை அனுப்பினால் சுரங்கப்பாதை அடைபடும் என்பதால், ஸ்கோர் வென்ட் எனப்படும் அணையின் அடிப்புற கதவு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தண்ணீர் மற்றும் சகதி முழுவதும் அணையில் இருந்து வெளியேறியது. 4 மணி நேரத்தில் சகதி மற்றும் தண்ணீர் முழுவதும் வெளி யேறியது. இதன் பின்னர் கதவுகள் மீண்டும் சாத்தப்பட்டு தற் போது அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது. முன்ன தாக இவ்வாறு திறக்கப்பட்ட சகதியுடன் கூடிய தண்ணீரில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீன் பிடித்தனர். இதற் கிடையில் குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதை பகுதியில் மட்டும் தற்போது சகதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அணையின் மொத்த பகுதி யிலும் உள்ள சகதியை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நொரம்பு மண் கடத்தல்
நொரம்பு மண் கடத்தல் தருமபுரி, நவ.20- தருமபுரியில் சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எச்.அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் தெய்வானை என்பவருக்கு, அ.தாதம்பட்டி கிராமத்திலுள்ள நாயகன் ஏரியில் நொரம்பு மண் எடுப்ப தாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று சட்டத்திற்கு புறம்பாக நொரம்பு மண் எடுக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கண்ட மண் கடத்தல் கும்பல் ஜேசிபி இயந்தி ரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரத்தை அரூர் காவல் நிலையத்தில் தெய்வானை ஒப்படைத்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி யோடி வர்களை தேடி வருகின்றனர்.