districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலையை கடக்க முயன்றவர் பலி

கோவை, மார்ச் 19- பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில், பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, தமிழ்மணி நகர்  பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் சேரன் நகர்  பகுதியில் சலூன் கடையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் இறைச்சி கடையும் நடத்தி வருகிறார். இந் நிலையில், தனது வீட்டிற்கு செல்வதற்காக சேரன் நகர் அருகே வரும் போது, கோவையிலிருந்து கார்த்திக் என்ப வர் அதிவேகமாக ஓட்டி வந்த கார்  குருநாதன் மீது மோதி யதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து பலத்த  காயமடைந்த குருநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் குருநாதன் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து மகாலிங்க புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

பைகாரா நீர்தேக்கத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

உதகை, மார்ச் 19- பைகாரா நீர்தேக்கத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சு கள் விடப்பட்டுள்ளன. மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமா னத்தை பெருக்குவதற்காக ஒன்றிய அரசு, பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மீன் உற்பத்தி, தரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சந் தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த  திட்டத்தின் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக ஆற்று  நீர் நிலைகளில் சாதா கெண்டை மீன் குஞ்சுகளின் வளத்தை பெருக்க திட்டமிட்டு ஆறுகளில் நன்னீர் மீன்  குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் விட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவின் பேரில், உதகை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் புனித் நகர் மற்றும் டி.ஆர். பஜார் பகுதியில் உள்ள பைகாரா நீர் தேக்கத்தில் முதல் கட்டமாக 50 ஆயிரம் எண்ணிக்கையிலான சாதா கெண்டை மீன் குஞ்சு விரலி கள் விடும் பணிகள் சனியன்று நடைபெற்றது. இதில்  பவானிசாகர் மற்றும் உதகை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்கள் ஜோதி லட்சுமணன், கதி ரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட் டத்தில் சுமார் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விட திட்டமிடப்பட் டுள்ளது. முதல் கட்டமாக தற்போது 50 ஆயிரம் மீன் குஞ்சு கள் விடப்பட்டு உள்ளன. இதேபோல் ஜெயந்தி நகரில் உள்ள கிளன் மார்கன், ஆறாவது மயில் பகுதியில் உள்ள  காந்தல் கால்வாய், தலைக்குந்தா கவர்னர் சோலை உள் ளிட்ட பகுதிகளிலும் 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் தொடர்ச்சி யாக விடப்பட உள்ளது. என்றனர். முன்னதாக, கடந்த மாதம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவ லாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் டிரவுட் மீன் குஞ்சுகள் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி சேலத்திலிருந்து 683 பேர் பங்கேற்பு

சேலம், மார்ச் 19- மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் சேலம் வீரர்கள் 683 பேர் பங் கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்துள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செ.கார்மேகம் தலைமை வகித்து பேசுகையில், முதலமைச்சர் கோப் பைக்கு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாண விகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனா ளிகள் ஆகியோருக்கு தடகளம், நீச்சல், கைப்பந்து, கால் பந்து உள்ளிட்ட 43 வகையான போட்டிகள் நடத்தி முடிக் கப்பட்டு உள்ளன. இதில் 12 ஆயிரத்து 998 ஆண்கள், 5  ஆயிரத்து 627 பெண்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 625 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 683 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ப வர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது, என்றார். முன்னதாக, இக் கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.

ரூ.60 மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல்

நாமக்கல், மார்ச் 19- ராசிபுரத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள பல்வேறு பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணிகள், சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகளும், பிள்ளாநல்லூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியை பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டியை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அதேபகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் தொலைவிற்கு, புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கெட்டுப்போன உணவு சாப்பிட்ட சிறுமி மயக்கம்

திருப்பூர், மார்ச் 19- பல்லடம் அருகே கெட்டுப்போன உணவு  சாப்பிட்டதால் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்ட தைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் என்ப வர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மங்கலம் சாலை, பொள்ளாச்சி, உடுமலை சாலை, திருப்பூர் சாலை, செட்டிபாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரி கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று பல்லடம் - மங்கலம் சாலையி லுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கல்லூரிக்கு எதிரே இயங்கி வரும் பேக்க ரிக்கு, அரசு கல்லூரி சிறப்பு பேராசிரியராக  பணிபுரிந்து வரும் மகாலட்சுமி என்பவர், தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த கடையில் தனது மகள் களுக்கு கேக் வாங்கி கொடுத்துள்ளார். குழந் தைகள், இரண்டு கேக்குகளும் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக கூறியுள்ளனர். இதனையடுத்து மகாலட்சுமி, கெட்டுப்போன கேக்குகளை ஏன் கொடுத்தீர்கள் எனக்கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த பல்லடம் உணவு பாதுகாப்புத் துறை வட்ட அலுவலர் கேசவராஜ், அந்தக்  கடையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் கெட் டுப்போன, தயாரிப்பு தேதி அச்சிடப்படாத கேக் வகைகளை கடைக்காரர்கள் விற் பனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மாதிரி கேக்குகளை உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து சென் றுள்ளனர். இதற்கிடையே கேக் சாப்பிட்ட சிறு மிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பல்லடம்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்லடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

ஈரோடு, மார்ச் 19- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட் டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட் டத்தில் புதியதாக விண்ணப்பிப்பதற்கு இரண்டு பெண் குழந் தைகள் இருந்தால், 2 ஆவது பெண் குழந்தை 3 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை இருப்பின் 3 வய திற்குள் இருக்க வேண்டும். பெற்றோர்களில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டி ருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத் திற்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்து முதலீட்டு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்மந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக்கத்தின் நகல் ஆகியவற்றுடன் ஏப்.10 ஆம் தேதிக்குள்  சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியாளர் களை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

தலைமறைவானவர் கைது உறவினர்கள் முற்றுகை

திருப்பூர் மார்ச் 19 - திருப்பூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடு பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் தலைமறை வானார். அவரை ஞாயிறன்று காவல் துறையினர் கைது  செய்த நிலையில், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர்.  இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து  வருகிறார். இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி  டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவாக இருந்த சூழ்நிலையில், ஞாயிறன்று தனிப் படை போலீசார் தனசேகரை கைது செய்து விசாரித்து வரு கின்றனர். இத்தகவலறிந்த அவரது குடும்ப உறவினர்கள் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொய் வழக்கு  போடுவதாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அத்துடன் திடீரென காவல் நிலையத்திற்கு முன்பு குமரன்  சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சில நிமிடம் போக்குவரத்துக்கு இடையூறு  ஏற்பட்டது. இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட தனசேகரின்  உறவினர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத் தினர். அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். தனசேகர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவை யில் இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டது.

திருப்பூர் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ. 2 கோடி நன்கொடை

திருப்பூர், மார்ச் 19 - திருப்பூரில் நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்படவுள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு மும்பை  இசிஜிசி நிறுவனத் தலைவர் செந்தில்நாதன் ரூபாய் 2 கோடி  நன்கொடை வழங்கினார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன்  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் நவீன புற்றுநோய் மருத்துவமனை கட்டப்படுகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சக்தி வேல்  மூலமாக மும்பை இசிஜிசி நிறுவன தலைவர் செந்தில் நாதன் சார்பில் ரூ.2.கோடி வழங்கப்பட்டது. ஞாயிறன்று நடை பெற்ற இந்நிகழ்வில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், திருப்பூர் மாநகர ஆணையர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், நான்காவது மண்டல தலைவர் இல.பத்ம நாபன், பல்லடம் நகரமன்ற தலைவர் கவிதாமணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

ரூ. 1.26 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், மார்ச் 19- திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மூலனூர்  ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 598 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி, ரூ. 1 கோடியே 26 லட்சத்து  41 ஆயிரத்து 766 க்கு விற்பனையானது.

இலவச கம்ப்யூட்டர் கணக்கியல் பயிற்சி வகுப்பு

திருப்பூர், மார்ச் 19 - திருப்பூர் மாவட்டத்தில் கிராமங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழ் மக்களுக்கு, இலவச கம்ப்யூட்டர் கணக்கியல்  பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று திருப்பூர்  கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.  அனுப்பர்பாளையத்திலுள்ள கனரா  வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் “இலவச கம்ப்யூட்டர்  கணக்கியல் பயிற்சி வகுப்பு 30 நாள் முழு  நேரப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள பயிற்சி யாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மார்ச் 20 திங்களன்று (இன்று) பயிற்சி  தொடங்கவுள்ளது.  இதில் எழுத படிக்க தெரிந்த, 19 முதல்  45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டிய தில்லை. காலை-மாலை தேநீர் மற்றும் மதிய  உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி யின் முடிவில் ஒன்றிய அரசின் ஸ்கில் இந்தியா  சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.  பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி  கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில்,  போக்குவரத்து சிக்னல் அருகில், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர்  -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும்,  முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங் கப்படும்.  மேலும் விவரங்களுக்கு தொலைபேசி :  9952518441, 8610533436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். ஆன்லைன் முன்பதி விற்கு http://tinyurl.com/4z2274t6 இந்த தகவலை, பயிற்சி நிலைய இயக்குநர் ஜே. பூபதிராஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் நகரில்  தார்ச்சாலை பணி

திருப்பூர், மார்ச் 19 - தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம் 2022 - 23இன் கீழ் ரூ. 26.80 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் மாநகராட்சி, 10ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் தார் தளம் மறு சீரமைக்கும் பணி வெள்ளி யன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி,  10 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா  மற்றும்  திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பால் விலையை உயர்த்த கோரிக்கை

திருப்பூர், மார்ச் 19 - தமிழ்நாடு அரசு பால் உற்பத்தி செய்யும் விவசாயி களின் பெரும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாட்டுப்பால்  லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 75 ஆக நிர்ணயம் செய்ய வேண்டுமென தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மாட்டுப்பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு லிட்டருக்கு 51 ரூபா யும் கேட்டு கோரிக்கை வைத்து  போராட்டங்களை தொடர்ந்து  நடத்தி வருகிறார்கள். இனியும் பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு  அறிவிக்காவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் கவன யீர்ப்பு ஆர்ப்பாட்டமும், சென்னையில் தலைமைச் செயல கத்தின் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா விரதமும், காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என தமிழக  விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூறியுள்ளது.

பூ மார்க்கெட் ஏலத்தை ரத்து செய்ய தீர்மானம் 

மாமன்ற உறுப்பினர்களுக்கு எம்எல்ஏ கோரிக்கை

திருப்பூர், மார்ச் 19 - திருப்பூர் பூ மார்க்கெட் ஏலத்தை ரத்து செய்ய மாமன் றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர், ஈஸ்வரன் கோயில் செல்லும் வழியில் பூ  மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு இரண்டு, மூன்று தலை முறைகளாக  வியாபாரிகள் பூ வியாபாரம் செய்து வரு கின்றனர். இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த  பூ மார்க்கெட் வளாகம் புதுப்பித்து வணிக வளாகமாக கட்டப் பட்டுள்ளது. முந்தைய பழைய பூ மார்க்கெட்டில் 92 வியாபாரி கள் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். புதிய வளாகம் கட்டும் பொழுது பழைய வியாபாரிகளுக்கு புதிய  வளாகத்தில் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரி கள் உறுதி அளித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியே றினர்.

தற்போது புதிய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பொது ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த ஏலத்திலும் பூ வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஆனால்  தனியார் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 2.51 கோடி மதிப்பில் ஏலம்  எடுத்துள்ளார். இந்த நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற  உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருமணம் உள்ளிட்ட விசேசங்களுக்கு இங்கு குறைந்த விலையில் பூ  கிடைக்கும் என்று பொதுமக்கள் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ஏலம் எடுக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப  வாடகையை உயர்த்தும் பொழுது, வியாபாரிகள் கடுமை யான விலை உயர்த்தி பூக்களை விற்க வேண்டிய நிலை  ஏற்படும். ஏற்கனவே மாதம் ரூபாய் 1500 வாடகை செலுத்தி வந்த வியாபாரிகள், தற்போது ரூபாய் 40 ஆயிரம் என்று மாத வாடகை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  பூக்கள் விலை என்பது ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமாக இருக்கும், மேலும் பூக்கள் அழுகும் பொருள் என்பதால் கடைகளுக்கு அதிகபட்ச வாடகை என்பது  நிச்சயம் அவர்களால் செலுத்த முடியாததாகவே இருக்கும்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, பல தலைமுறைகளாக பூ வியாபாரம் செய்து  வருபவர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, பொது ஏலத்தை ரத்து செய்து அவர்களுக்கு குறைந்தபட்ச வாடகையில் பூக்கடைகளை ஒதுக்கீடு செய்ய எதிர்வரும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  மாமன்ற உறுப்பினர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தோழர் கொங்குநதி மறைவு

ஈரோடு, மார்ச் 19- ஈரோடு மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தோழர் கே. கொங்குநதி சனியன்று தனது இல்லத்தில் காலமானார். ஈரோடு மாநகரில் உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் வசித்து வந்த கே.கொங்குநதி, கதர் கிராம தொழில் வாரி யத்தில் பணியாளராக செயல்பட்டு வந்தார். கடந்த 2012 ஆம்  ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத் துக்கொண்ட இவர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  முன்னாள் மாவட்ட பொருளாளர், நகரச் செயலாளர் உள் ளிட்ட பொறுப்புகளிலும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழுவின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பி னராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனியன்று காலை அவரது இல்லத்தில் காலமா னார். அவரது கணவர் கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு திருமணமான ஒரு மகனும், திருமணமாகாத நிலையில் ஒரு மகனும் உள்ளார். இறுதி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணி யன், நகர செயலாளர் பி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சோதனை ஓட்டம்

அன்னூர், மார்ச் 19- அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சோதனை ஓட்டம் துவங் கிய நிலையில், அன்னூர் நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வந்தபோது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி  வணங்கி வரவேற்றனர். கொங்கு மண்டல விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவுத்  திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகள் 90 சத விகிதம் முடிவுற்ற நிலையில், சோதனை ஓட்டமாக அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் விடப்படுகிறது. 6 நீரேற்று நிலை யங்கள் இந்த திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ளன. இதில்  நீர்ப்பிடிப்பு பகுதியான காலிங்கராயன் அணைக்கட்டிலி ருந்து 6 ஆவது நீரேற்று நிலையம் அமைந்துள்ள அன்னூர் பகுதிக்கு சோதனை ஓட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.  நீரேற்று நிலையத்தில் காத்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் வரும்போது  மலர் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங் களில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் எனவும் அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக் கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சோலாரில் இயங்கும் போர்வெல்: தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

மேட்டுப்பாளையம், மார்ச் 19- மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் சோலாரில் இயங்கும் போர்வெல் மூலம்  தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறை யினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்திலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள் ளது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளை யம், சிறுமுகை,காரமடை வனச்சரகத்திற் குட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவு கிறது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற் குட்பட்ட 15 குட்டைகள் தண்ணீர் இல்லை. இத னால் வனச்சரகத்திற்குட்பட்ட 18 தொட்டிக ளில் வனத்துறையினர் தினந்தோறும்  தண் ணீர் நிரப்பி வருகின்றனர். மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட புலிக்குட்டை எனும் இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சக்தியுடன் இயங்கக்கூடிய போர்வெல் அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீரானது மேல்நிலைத்தொட்டியில் நிரப்பி அங்கிருந்து தண்ணீரானது தொட்டிகளுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின் றன.  இதுகுறித்து வனச்சரகர் கூறுகையில், மேட் டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதி களில் வனவிலங்குகளின் தாகத்தை தணிக் கும் வகையில், 18 தொட்டிகளிலும் அவ்வப் போது தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின்சக்தியுடன் இயங்கும் போர்வெல்  அமைக்கப்பட்டு அதன் மூலமாகவும் தொட்டி களில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணி கள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். மேலும், 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பள வுள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை தடுக்கும் பொருட்டு அடர் வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர்  நிரப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வன விலங்குகள் அடர் வனப்பகுதியில் இருந்து வனஎல்லை பகுதிக்கு வருவது குறையும் எனவும் தெரிவித்தார்.

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்?

கோவை, மார்ச் 19- சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் என பீதி கிளம்பியுள்ள நிலையில், கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அடையாளம் தெரியாத விலங்கு சிறுத்தையாக இருக்கக்கூடும் என வனத்துறையினர், கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதிபாளையம் கிரா மத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்த மான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத் திலிருந்த ஆடு, கீதாமணி என்பவரது தோட்டத்திலிருந்த கன்றுக்குட்டி அடுத்த டுத்து அடையாளம் தெரியாத விலங்கு தாக்கி உயிரிழந்தன. இதனையடுத்து பொன்னுச் சாமி தோட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அதில் சிறுத்தை நட மாட்டம் இருந்தது தெரியவந்தது‌. வனப்பகு தியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலை விலிள்ள இந்த கிராமத்தில் சிறுத்தையின்  நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களி டையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதுகுறித்து கோவை வனத்துறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் பதிவாகியிருந்த காலடி தடங் கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை  நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட  நிலையில், வனத்துறை சார்பில் இரு  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டது. தொடர்ந்து சிறுத்தை நடமாட் டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரி கள் திட்டமிட்டுள்ளனர்.

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சேலம், மார்ச் 19- வாழப்பாடி அருகே உள்ள கல்வராயன் வனப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், 800 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கல்வராயன் வனப்பகுதிக்குட்பட்ட பாச்சாடு, பவளப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு, அங் கிருந்து லாரி டியூப்கள் மூலம் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு, பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்ட வருவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன் வனப்பகு தியில் கீழ்நாடு, மேல்நாடு, கருமந்துறை, பாச்சாடு பகுதி யில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி தலைமையிலான  போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சாராயம் ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 800 லிட் டர் சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.

தொலைநோக்கி கருவி பழுது:  சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகை, மார்ச் 19- வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், தொலை நோக்கி கருவி பழுதாகியுள்ளதால் பள்ளத்தாக்கு காட்சி களை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் தற் போது இதமான காலநிலை நிலவுவதால், சமவெளி பகுதி களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படை யெடுத்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக வார விடுமுறை தினமான ஞாயிறன்று உதகையின் முக்கிய சுற்றுலா தலங்க ளில் ஒன்றான தொட்டபெட்டா மலைச் சிகரத்தை காணவும் மற்றும் அங்குள்ள பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு மகிழ வும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி  மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளை தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் காண முடிந்தது. மேலும்,  நீண்ட வரிசையில் காத்திருந்து தொலைநோக்கி கருவி மூலம் பள்ளத்தாக்கு காட்சிகளை காண முயற்சித்தனர். ஆனால் தொலைநோக்கி கருவியின் லென்ஸ் சரிவர தெரி யாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இதனை உடனே புதிய தொலைநோக்கி கருவியை வாங்க வேண்டுமென சுற் றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீகாரில் வதந்தி பரப்பியவரை கைது செய்த திருப்பூர் போலீசார்

திருப்பூர், மார்ச் 19 - தமிழ்நாட்டில் குறிப்பாக திருப் பூரில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக பொய்யாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த வரை திருப்பூர் தனி படை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறை ஞாயிறன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்ட காவல் அலு வலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை, செயல்பட்டு வருகிறது. மேற் கண்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறை அலுவலகத்தில் அவிநாசி காவல் நிலைய முதல்நிலை காவலர் வேல் முருகன் இருந்த போது கடந்த மார்ச்  4 ஆம் தேதி இரவு 10 மணியளவில் தனது முகநூல் பக்கத்தை பயன்படுத் திய போது, “ஹெட்லைன்ஸ் பீகார்”  என்ற முகநூல் பக்கத்தில், தமிழ்நாட் டின், திருப்பூரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 நபர்கள் படுகொலை செய் யப்பட்டதாக தவறான தகவல் பதி விட்டுள்ளதை பார்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல் நிலை காவலர் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற  எண். 10/2023 ஆக பதிவு செய்து ஐபிசி 153(பி), 505(2), தகவல் தொடர்பு சட் டப்பிரிவு 66(டி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கோ.சசாங் சாய் உத்தரவின் படி காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் சித்ராதேவி, தலைமை காவலர் சந்தானம், முதல் நிலைக் காவலர்கள் கருப்பையா, முத் துக்குமார் மற்றும் காவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த 10 ஆம்  தேதி பீகார் சென்று, பீகார் மாநில  காவல்துறை உதவியுடன், தேடப்படு பவரின் ஆதார் கார்டில் கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கு சென்று விசா ரணை செய்ததில் அவர் அங்கு இல் லாத நிலையில் அவரது செல்போன் சிக்னலை தொடர்ந்து கண்காணித்த தில் ரத்வாரா என்ற இடத்தில் இருப் பது கண்டறியப்பட்டது. மார்ச் 18 ஆம் தேதி இரவு 7 மணிக்கு எதிரி தே.உபேந் திர ஷனி (32), என்பவரை தனிப்படை யினர் கைது செய்தனர். அவர் பீகார் மாநிலம். ஹத்தாரி அருகே பர்ஹாடு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார் என திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கபடி போட்டி

திருப்பூர், மார்ச் 19- பல்லடம் வட்டம், அனுப் பட்டி கிராமத்தில் சாய் பார்ம்ஸ் மற்றும் அனுப்பட்டி இளம்புயல் கபடிக்குழு சார் பில் இரண்டு நாட்கள் நடை பெறும் மாநிலம் தழுவிய கபடி போட்டி ஞாயிறன்று துவங்கியது. இப்போட்டி யினை திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வ ராஜ் துவக்கி வைத்தார். 2  நாட்கள் நடைபெறும் இப் போட்டியில் 95 அணிகள் பங் கேற்க உள்ளன. இறுதி சுற் றில் வெற்றி பெற்றவர்க ளுக்கு கோப்பைகள் வழங்கப் பட உள்ளன.