districts

img

அமராவதி அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பை முறைப்படுத்திடுக

உடுமலை, ஜன.2- அமராவதி அணையிலிருந்து பாசனத் திற்கு திறந்துவிடும் தண்ணீர் திறப்பை முறைப் படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா மாநாடு வலியுறுத்தியுள்ளது.  விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகாவின் மூன்றாவது மாநாடு செவ்வா யன்று சூர்யா மஹாலில், ராஜரத்தினம் தலை மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலூகாச் செயலாளர் ஆர். வி.வடிவேல், விவசாயிகள் சங்கத்தின்  மாவட் டப் பொருளாளர் பாலதண்டபாணி, சிஐடியு கட்டுமான சங்கத்தின் மாவட்ட துணைச்செய லாளர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலா ளர் சங்கத்தின் காந்தி, மாதர் சங்கத்தின் ராதா  ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரை யாற்றினர்.  இதில், தமிழக அரசின் முதலாவது கூட்டு றவு துறையின் ஆலையான அமராவதி கூட் டுறவு சர்க்கரை ஆலைக்கு கூடுதல் நிதி  ஒதுக்கி பராமரிக்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தை விவசாய வேலைகளுக்கு பயன் படுத்த வேண்டும். மடத்துக்குளம் வட்டாச்சி யர் அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளிலும் பணம் பெற்று வேலை நடப்பதால், பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தடுக்கும் வகையில் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண் டும். ரேசன்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். கோவில் நிலங்களில் விவசாயம் செய்து வருபவர்களுக்கே நிலத்தை தர  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  முன்னதாக, மாநாட்டில் மடத்துக்குளம் தாலூகாத் தலைவராக வி.ராஜரத்தினம், செயலாளராக எம்.எம்.வீரப்பன், பொருளாள ராக எஸ்.வெள்ளியங்கிரி, துணைத்தலைவ ராக அழகேஸ்வரன், துணைச்செயலாளராக கணேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர்.