districts

புளியம்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வேலை மறுப்பு

சிஐடியு புகார்

ஈரோடு, ஜூன் 16- புன்செய் புளியம்பட்டி நகராட் சியில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு சுரண்டலை தடுத்து,  உரிய பாதுகாப்புடன் வேலை யளிக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்  சங்கத்தின் சார்பில் அளிக்கப் பட்டுள்ள மனுவில் தெரிவித்துள்ள தாவது, ஈரோடு மாவட்டம், புன் செய்புளியம்பட்டி நகராட்சியில் பணி நிரந்தரமின்றி பொது சுகா தாரப் பிரிவில் தூய்மை பணியா ளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் டிபிசி பணியாளர்கள் சுமார் 60க்கும் மேற் பட்டவர்கள் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு நகராட்சி  சுகாதாரப்பணியை ஒப்பந்தம் செய் துள்ள நிறுவனம் மூலமாக தினக் கூலி அடிப்படையில் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த  ஊதியமானது தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச கூலி சட்டம் 1948-ன் படி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.610 வழங்கப்பட வேண்டும்.  ஆனால், மேற்படி நகராட்சியின் ஒப்பந்ததாரரால் தூய்மை பணி யாளர்களுக்கு பெண்களுக்கு ரூ. 320, ஆண்களுக்கு ரூ.360 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் வைப்பு நிதி, இஎஸ்ஐ திட்டங்கள் அம லாக்கப் படுவதில்லை. இத்தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதியத்தைக் கேட்பதையும், தொழிற்சங்கத்தோடு இணைந்து  போராடுவதை நகராட்சி நிர்வா கத்தால் சீரணிக்க முடியவில்லை. இதன்காரணமாக, நகராட்சியின் தலைவர் மற்றும் உதவி தலைவர் ஆகியோரால் தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். பலிவாங்கப் படுகின்றனர்.  இதனால், 40 தொழிலாளர் களுக்கு கடந்த 10 நாட்களுக்கு  மேலாக வேலை மறுக்கப்பட் டுள்ளது. தலைவர் மற்றும் உதவி தலை வரின் மிரட்டலுக்குப் பயந்தது  பின்  வாங்கிய சில தொழிலாளர்களுக்கு மட்டும் மீண்டும் வேலை வழங்கப் பட்டது. மற்றவர்களுக்கு வேலை  கொடுக்கப்படவில்லை. தலித்  சமூகத்தைச் சேர்ந்த இத்தொழி லாளர்கள் பல ஆண்டுகளாக ஒப் பந்ததாரர்கள் மற்றும் நகராட்சி  நிர்வாகத்தினராலும் மிகக் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு  உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக் கப்பட்டனர்.  எனவே, தொழிலாளர்களின் வறிய நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டு மென சிஐடியு ஈரோடு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர்.