உடுமலை, ஜன.20- உடுமலையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண் ணெண்ணெய் அரை லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு அளவை அதி கபடுத்தி வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார் கள். உடுமலை தாலுகா பள்ளாபாளை யம் ஊராட்சி கொங்கலக்குறிச்சி கிரா மத்தில் பகுதி நேர நியாவிலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை வாரம் ஒரு முறை சனிக்கிழமை மட்டும் திறக்கப்படும். பள்ளபாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் (பதிவு எண் 1848) இயங்கி வருகிறது. இந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட நியாய விலை அட்டை தாரர்கள் உள்ளனர். எனவே இந்த நியாய விலை கடையை முழுநேர கடையாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 20 ஆம் தேதி மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப் பட்டபோது, ஒரு அட்டைக்கு ஒரு லிட்டர் வழங்கியதாக செல் போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் அரை லிட்டர் மட்டுமே வழங் கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரி வித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரி விக்கையில், வாரம் ஒரு நாள் மட்டுமே பொருட்கள் வழங்குவதால் எங்க ளுக்கு பொருட்கள், மண்ணெண்ணெய் உள்ளிடவை முறையாக கிடைப்ப தில்லை. கேட்டால் எங்களுக்கு இந்த ஊருக்கு இருபது லிட்டர் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதை அனைவருக் கும் பகிர்ந்து தருகிறோம் என்று ஊழியர் கள் சொல்வதாக மக்கள் தெரிவித்தனர். இது குறித்து குடிமைப்பொருள் வட் டாட்சியரிடம் கேட்ட போது இது குறித்து விசாரணை செய்வதாக கூறினார்.