districts

img

தொடரட்டும் இந்த ஜீவ ஒளிப்பயணம்...

பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் பொழுது போக்கு வசதி என்று சொல்லிக் கொள்வதற்கு பெரி தாக எதுவும் இல்லை. எப்போதும்  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக் கும் மக்களின் ஓய்வுப் பொழுது மிகவும்  குறைவு. கிடைக்கும் ஓய்வு நேரத்தை யும் பிறருடன் கூடிக் கலந்து, மன மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பயன்ப டுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் பெரும்  தேவையாக உள்ளது. இங்கிருக்கும் மாநகராட்சி வெள்ளி  விழா பூங்கா மட்டுமே ஒரேயொரு பொதுப்  பொழுது போக்கு இடமாக இருக்கிறது.  

இல்லாவிட்டால் திரையரங்கம். கலை இலக்கிய கூடுகைக்கு உரிய பொது இடங்கள் எதுவும் இல்லை. பின்னலாடை தொழில் வளர்வதற்கு  முன்பாக, அக்கம் பக்கத்து கிராமங்க ளின் தொகுப்பாக திருப்பூர் சிறு நகர மாக இருந்தபோது நொய்யல் ஆற்றங் கரை மிக முக்கியமான ஒரு பொழுது  போக்கு இடமாக இருந்ததாக மூத்தவர் கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த மக்களின் பண்டிகை காலங் களிலும், விடுதலைப் போராட்ட கால  அரசியல் நிகழ்வுகளிலும் நொய்யல் ஆற்றங்கரைக்கு வரலாற்றில் முக்கிய  இடமுண்டு. எனினும் பின்னலாடை தொழில் ஏற்றுமதி வளர்ச்சி, சாய  ஆலைகள் என அசுர வேகத்தில் பெரு கிய கால கட்டத்தில் நொய்யல் ஆறு  மிகப்பெரும் ஜீவ மரணப் போராட் டத்தை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட் டது. இந்த நகரத்து மக்களும் இயந்தி ரகதியாக எல்லாவற்றையும் கடந்து ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டே  இருந்தனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு,  ஆழமான இருட்டின் தொலை தூர வெளிச்சமாக வந்து வாய்த்திருக்கிறது திருப்பூர் பொங்கல் திருவிழா 2023! திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், நொய் யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி  நொய்யல் சங்கம் ஆகிய அமைப்புகள்  கை கோர்த்து இந்த ஆண்டு தைப்  பொங்கல் விழாவை மக்கள் திருவிழா வாக, பண்பாட்டு பெரு நிகழ்வாக நடத்த  வேண்டும் என்று முனைப்போடு களம்  கண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத் தைப் பாராட்டியாக வேண்டும். ஏதோ ஒரு அடையாளப்பூர்வ விழா என்று இல் லாமல், நகரின் மையத்தில் மேற்கிலி ருந்து கிழக்காக ஓடும் இந்த நொய்யல்  நதிக் கரையின் வடக்கு மற்றும் தெற்கு  பகுதிகளை சுத்தமாக தூய்மைப்படுத்தி நதியோரம் கம்பி வேலி அமைத்து, கரைகளை செப்பனிட்டு அவற்றில் அழகிய ஓவியங்கள் வரைந்து சிறப் பாக்கியது. திருப்பூர் வாசிகளில் பலரின் மனத் தில் நீண்ட நாள் ஏக்கமாக இருந்த அந்த  அழகிய நொய்யல் ஆற்றின் பழைய நினைவுகளுக்கு இந்த அழகுபடுத்தல் சற்றே மருந்திட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. நொய்யல் எப் போதும் தண்ணீர் செல்லும் ஜீவநதி யாக இல்லை. ஆனால் உயிரிழந்து போன ஒரு வெற்றுத் தடமாகவும் அது  மாறிப் போய்விடும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. நொய்யல் மீளும், நொய்யல் நதிக்கரையின் பண் டைய நாகரிகமும் அதன் தொப்புள் கொடி உறவாக தொடர்ந்து மலரும் என் பதைத்தான் இந்த ஆண்டு பொங்கல் பண்பாட்டு திருவிழா பறை சாற்றி இருக் கிறது.

விழா குழுவினர் ஒன்றிணைந்து திட் டமிட்டு, இந்த விழாவை நடத்திக் காட்டி னர். மூன்று நாட்களும் முத்தான நாட் களாக இருந்தன. ஒவ்வொரு நாளும்  பண்டைய பாரம்பரிய கலை நிகழ்ச்சி கள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என சிறப்பாக இருந்தது. மக்களின் மரபணுக்களில் ஊறிக்  கிடக்கிறது அவர்களின் பண்பாட்டு அம் சங்கள். மூன்று நாள் பொங்கல் திருவி ழாவுக்கு திருப்பூர் மக்கள் குடும்பம், குடும்பமாக வந்தனர். தங்கள் பிள்ளை களை, வயதான மூத்தோரை அழைத்து  வந்தனர். இங்கே நிகழ்த்தப்பட்ட கலை  நிகழ்ச்சிகளும், அதன் ஊடாக நொய் யல், திருப்பூர் ஆகியவற்றின் பண் பாட்டு, வரலாற்று சிறப்புகளை, தொன் ன்மங்களை வெளிப்படுத்தியபோது உள்ளபடியே பலருக்கும் மனதில் இனம் புரியாத உற்சாகமும், மகிழ்ச்சி யும் ஏற்பட்டது. இந்த விழாவைப் பற்றி சொல்வ தற்கு இங்கு வந்து சென்ற மக்களின் மனங்களில் ஏராளமான பதிவுகள் உள் ளன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் அனைவரிடமும் ஏக்க மாக வெளிப்படும் ஒரே விசயம், இந்த ஓராண்டுடன் விட்டுவிடக் கூடாது என் பது மட்டுமே! இது திருப்பூரின் அடையா ளமாக, நொய்யல் நதியின் உயிர்ப்பாக  ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண் டும். இப்போது போல் இம்மண்ணின் செழுமையான மரபையும், பண்பாட் டையும், உழைப்பையும், உழவையும்,  சுற்றுச்சூழலையும் போற்றும் அர்த்தப் பூர்வமான ஒரு பெருந்திருவிழாவாக தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திச் சென்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநக ராட்சியும், நொய்யல் பண்பாட்டு அமைப்பும், ஜீவநதி நொய்யல் சங்க மும் ஒரு அற்புதமான ஒளி விளக்கை  ஏற்றி வைத்திருக்கின்றனர். தொடரட் டும் இந்த பிரகாசமான பயணம்!  (ந.நி)