districts

img

வடமாநில கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல், ஜூன் 22- தனியார் அட்டை மில்லில் பணியாற்றி வந்த குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த கொத்தடிமை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டனர்.  நாமக்கல், ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிரா மத்தில் தனியார் அட்டை மில் இயங்கி வந்தது.  இந்நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் கள் மற்றும் ஊதியம் வழங்காமல் கொத்த டிமைகளாக தொழிலாளர்கள் வேலை வாங் கப்படுவதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதனை யடுத்து,  தில்லி குழந்தைகள் நல பாதுகாப்பு  துறை ஒருங்கிணைப்பாளர்  மாலிக் தலைமை யில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து குழந்தை தொழி லாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழி லாளர்களை மீட்டனர்.  இதில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 7  பெண்கள் உள்ளிட்ட 14 பேர் மீட்கப்பட் டனர். மீட்கப்பட்ட 14 பேரும் வருவாய் கோட் டாட்சியர் கவுசல்யா முன்னிலையில் அவர் களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மேலும், மீட்கப்பட்ட ஒவ்வொருவ ருக்கும் தலா ரூ.30 ஆயிரம் விதம் ரூ. 4,20,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. முறைப்படி விடுவிக்கப் பட்டதற்கான சான்றிதழை வருவாய் கோட் டாட்சியர் கௌசல்யா கையொப்பமிட்டு ஒவ் வொருவரிடமும் தனித்தனியாக வழங்கி னார். மீட்கப்பட்ட ஒவ்வொருவரும் பாதுகாப் பாக சென்று படிக்க வேண்டும். இதுபோல் மீண்டும் வந்து மாட்டிக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர்.