districts

img

ரூ.9 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

உதகை, செப்.7- குன்னூர் அருகே ரூ.9 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை  அதிகாரிகள் மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள மவுண்ட் பிளசண்ட பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார்  ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அதனை அங்குள்ள தனியார்  டென்னிஸ் கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதா னமாக பயன்படுத்தி வந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில்  வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த நிலம் அரசுக்கு  சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் கீா்த்தி  பிரியதர்ஷினி தலைமையில் வருவாய்த்துறையினர் மவுண்ட்  பிளசண்ட் பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டனர். அதன்  தற்போதைய மதிப்பு ரூ.9 கோடியாகும். இந்த மைதானம்  தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வரு வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.