நாமக்கல், ஜூலை 15- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில மாநாடு நாமக்கல் மாவட்டத்தில் நடை பெறுவதையொட்டி மாநாட்டு வரவேற்புகுழு அமைக்கப்பட்டது. நாமக்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட குழு அலுவலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில மாநாட்டு, வரவேற்பு குழுஅமைப்புகூட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வீ.சதாசிவம் தலைமை யில் நடைபெற்றது.இதில், சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாநில பொதுச் செயலாளர் க.முகமது அலி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் படைவீடு பி.பெருமாள், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நாமக்கல் அருகே உள்ள முத்துகாபட்டி புகழேந்தி திருமண மண்ட பத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திடுவது எனவும், அதற்கான வரவேற்பு குழு, நிதி குழு, விளம் பர குழு, பிரச்சார குழு உள்ளிட்டவை அமைக் கப்பட்டது. மாநில மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக பி.பெருமாள், செயலாளராக வி.சதாசிவம், பொருளாளராக கே.பூபதி மற் றும் வர்க்க வெகுஜன சங்க மாவட்ட செயலா ளர் உள்ளிட்ட15 பேர் கொண்ட மாநாடு வர வேற்பு குழு அமைக்கப்பட்டது.