districts

img

நூறு நாள் வேலை, அரசுப் பள்ளிகளில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. நேரில் ஆய்வு

திருப்பூர், ஜூலை 11 – திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட  பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டம் மற்றும்  அரசுப் பள்ளிகளில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.  நேரில் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் பொது மக்களிடமும் கோரிக்கை மனுக்களை  பெற்றார். திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட இடுவாய், மங்கலம், முதலிபாளையம் ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட் பட்ட பெரியாண்டிபாளையம், முருகம்பா ளையம், வீரபாண்டி, முத்தணம்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட 10 வார்டு பகுதி கள் ஆகியவை பல்லடம் சட்டமன்றத் தொகு திக்குள் வருகின்றன. இந்த பகுதிகள் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட் டவையாகும். எனவே கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திங்களன்று இப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, பொது மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முதலில் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட  சீராணம்பாளையம் கிராமத்தில் நூறு நாள்  வேலை திட்டப் பணிகளை அவர் பார்வை யிட்டு, அதில் வேலை செய்யும் பெண் தொழி லாளர்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவர்களது குறைகள் பற்றி கேட்டறிந்தார். இதையடுத்து இடுவாய் ஊராட்சி பார திபுரம் சமுதாயக் கூடத்தில் பொது மக்களி டம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின்னர்  பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள் ளியில் மரக்கன்றுகள் நட்டு பள்ளி செயல்பாடு  குறித்து தலைமை ஆசிரியை காளீஸ்வரியி டம் கேட்டறிந்தார்.

பின்னர், மங்கலம் ஊராட்சிமன்ற அலு வலகத்துக்குச் சென்று அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள், பல்வேறு அரசியல்  கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதி கள் வழங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.  அங்கிருந்து பெரியாண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நான்காவது மண்டல  அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந் தவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற் றார். அத்துடன் ஆண்டிபாளையம் மாநக ராட்சி நடுநிலைப் பள்ளிக்குச் சென்று அங் குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின் னர் முருகம்பாளையம் மாரியம்மன் கோயில்  எதிரில் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். அங்கு மாதர் சங்கத்தி னர் ஆரத்தி எடுத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து வீரபாண்டிக்குச் சென்று அங்குள்ள வரி வசூல் மையத்தில் மக்களைச்  சந்தித்து மனுக்கள் பெற்றார். பின்னர் அருகில்  இருக்கும் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் சென்று அங்குள்ள நிலைமை களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாலையில் செட்டிபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.  முன்னதாக குப்பைகளை தரம் பிரித்து தூய் மையைப் பேண மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்பு முத்தணம்பாளையம் கிராம நிர்வாக அலுவ லகத்திலும், முதலிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் அவர் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற் றார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியின்போது மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை  மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலை வர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, இடு வாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணே சன், மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ். எம்.பி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ரவிச்சந்திரன், சிபிஐ மான்ற உறுப்பினர் அருணாசலம், திமுக மாமன்ற உறுப்பினர்கள் காந்திமதி மணி, கவிதா கண்ணன், சாமிநாதன், கோமதி  குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மாநகராட்சி ஆணையர் கிராந் திகுமார் பாடி, உதவி ஆணையர் செல்வநா யகம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன் றியப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்தனர். இத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ் ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர். பரமசிவம், அவிநாசி ஒன்றியக் கவுன்சிலர் பி. முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பா. லட்சுமி, மாதர் சங்கத்தைச் சேர்ந்த ஈ. அங்குலட்சுமி, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செய லாளர்கள், கட்சி ஊழியர்கள், திமுக பகுதி செயலாளர்கள் முருகசாமி, கோவிந்தராஜ், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.