districts

img

ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 14 சதவீதம் வளர்ச்சி

திருப்பூர், ஆக. 16 - ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தென்னிந்திய பொறுப்பாளர் டாக்டர் ஆ.சக்திவேல் வெள்ளியன்று கூறிய தாவது, ஜூலை மாதத்தில் இந்திய ஆயத்த  ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 13.8 சதவி கித வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது கடந்த  வருட ஜூலை மாதத்தோடு ஒப்பிடும் பொழுது  ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,400 கோடி உயர்வு  ஆகும். ஆக மொத்தம் ஜூலை மாத ஏற்றுமதி  ரூபாய் 10,677 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 4 மாதங்களுக்கான (ஏப்ரல்-ஜூலை) மொத்த ஏற்றுமதி 5.13  பில்லியன் டாலராக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.42,800 கோடியாகும். இது  சராசரியாக 7.6% வளர்ச்சியாகும். இதன்  மூலம் திருப்பூரின் ஏற்றுமதி சுமார் ரூ.400  கோடி அளவுக்கு கடந்த ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளதை காண முடிகிறது. குறிப்பாக  அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுக ளுக்கான நமது ஏற்றுமதி உயர்ந்துள்ளதை  காண முடிகிறது. இதன் மூலம் இந்நாடுகளின்  நுகர்வு அதிகரித்திருப்பது தெரிகிறது. வரும்  காலங்களில் இது நமது இந்திய மற்றும் திருப் பூரின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும். இதன் மூலம் கண்டிப்பாக நமது ஏற் றுமதி மேலும் வளர்ச்சி அடையும் என தெரி வித்துள்ளார்.