நாமக்கல், ஏப். 5- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லி மலை ஒன்றியம், சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. கொல்லிமலை வட்டார திட்ட மருத்துவ அலுவலர் புஷ்ப ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் வழங் கினர். இதில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் அன்பு மலர் மற்றும் ரத்த வங்கி செவிலியர்கள் ஆய்வக நிறுவ னர்கள், சோளக்காடு வட்டார மருத்துவமனை ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அசோக் லேலண்ட் லேரின் லிங்க்ஸ் பவுண்டேசன் பணியாளர்கள் பங்கேற்றனர். கொல்லிமலை அரசு மருத்துவமனையில், இதுவரை ரத்ததான சிறப்பு பிரிவு இல்லாத நிலையில், வரும் ஏப்ரல் 9ஆம் தேதியன்று கொல்லிமலை மருத்துவமனையில் ரத்ததான சிறப்பு பிரிவு தொடங்கப்பட உள்ளது குறிப்பிட்டதக்கது.