கோவை, டிச.16- அன்னூரில் போக்குவ ரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் கோவை மாவட்ட ஆட் சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன்றியச் செயலாளர் மணி கண்டன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலேயே சிறந்த சுற்று லாத்தலமான உதகமண்டலத்திற்கு, அன்னூர் நகரத்தின் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. மேலும், கோவையிலி ருந்து சத்தியமங்கலம், மைசூர் செல்வ தற்கு முக்கியமான பாதையாகவும் அமைந் துள்ளது. வாகனப்பெருக்கத்தால் அன்னூர் நகரில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. விசேஷ காலங்களில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார் கள். அன்னூரை கடப்பதற்கே 1 மணி நேரத் திற்கு மேலாக நிற்க வேண்டியுள்ளது. அன் னூர் பகுதி வேகமாக வளர்ந்து வரும் பகுதி யாகும். பொதுமக்களின் துயரத்தை போக்க வும், அன்னூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படை யில் சுற்றி ரிங் ரோடு அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும், இவ்வாறு அம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அன்னூர் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் தீபிகா, அனுஷ்யா, அர்ஜூன், சர வணன், சுகுமார், ரமேஷ், லோகேந்திரன், மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்த பின்பு மாவட்ட ஆட்சியர் ஆலுவலகம் முன்பு கோரிக்கையை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.