தருமபுரி, ஜூன் 8- தருமபுரி அருகில் சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார் பில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலை யில், பாலியல் குற்றவாளியை விரை வில் கைது செய்யப்படுவார் என காவல் துணை கண்காணிப்பாளர் உறுதிய ளித்துள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத் தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளி யில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிறைதுறையில் வார்டனாக பனியாற்றி வரும் பார்த்தி பன் என்பவர், சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும், இதனை வெளியில் சொன்னால் குடும் பத்தையும், உண்னையும் கொன்று விடு வேன் என மிரட்டியுள்ளார். இதனால் நடந்த சம்பவத்தை சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில், சிறு மிக்கு திடீரென உடல்நிலை சரியில்லா மல் போகவே, சிறுமியை தாயார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரி சோதனை செய்த மருத்துவர்கள், 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரி வித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற் றோர்கள் விசாரிக்கையில், நடந்த சம்ப வங்களை தெரிவித்துள்ளார். இதனைய டுத்து, பார்த்திபன் மீது அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தனர். இதனையடுத்து, பார்த்திபன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது வரை குற்றவாளி கைது செய்யப்பட வில்லை. இதையடுத்து, தருமபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிட மும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இத னையறிந்து மேலும், பார்த்திபன் சிறுமி யின் குடும்பத்தினருக்கு கொலை மிரட் டல் விடுத்துள்ளார். இதனையறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர், பார்திபனை கைது செய்ய வேண்டும். பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வியாழனன்று அரூர் வட் டாட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட் டத்திற்கு திரண்டனர். இதனையடுத்து, அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மாதர் சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில், 15 நாட்களுக்குள் குற்ற வாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண் காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் உறுதி யளித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட தலைவர் ஏ. ஜெயா, வட்ட செயலாளர் தனலட்சுமி, வட்ட துணைத்தலைவர் லூதர்மேரி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, எஸ். நிர்மலாராணி, எம்.மீனாட்சி, ரங்கநாயகி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பி.குமார், மலை வாழ் மக்கள் சங்க பொறுப்பாளர் எஸ்.கே. கோவிந்தன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி ஒன்றிய செயலாளர் பி.வி.மாது, ஆகியோர் கலந்து கொண்டனர்.