உதகை, அக். 14- மார்க்சிஸ்ட் கட்சியின் நீல கிரி மாவட்ட பந்தலூர் ஏரியாக் கமிட்டியின் செயலாளராக ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நீலகிரி மாவட்ட பந்த லூர் ஏரியாக் கமிட்டியின் இரண் டாவது மாநாடு ஞாயிறன்று பன் னீர்செல்வம் மற்றும் சுந்தர்ராஜன் தலை மையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாவட்டச்செயலாளர் வி. ஏ.பாஸ்கரன் உரையாற்றினார். வேலை அறிக்கையை செயலாளர் முன்மொழிந்தார். மாநாட்டை வாழ்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோ.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், வனவிலங்கு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவுற்று வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக நிர்வாகத்தை சீர மைத்து, தோட்டத் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். கட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் இத னால் வரை திறக்காமல் இருக் கக்கூடிய தேவாலா அரசு பழங்கு டியினர் உண்டு உறைவிடப் பள்ளி கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு கட்டப் படும் வீடுகளில் ஏற்படும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில், 11 பேர் கொண்ட பந்தலூர் ஏரியாக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. பந்த லூர் ஏரியாக் கமிட்டியின் செயலாளராக ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.முடிவில், வரவேற் புக்குழு தலைவர் மாறன் நன்றி கூறினார்.