சேலம், மே 9- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண் டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க சேலம் மாவட்ட 6 ஆவது மாநாடு ஓமலூர் முத்தநாயகன்பட்டியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.அரியாக்கவுண்டர் தலைமையில் நடை பெற்றது. இதில், மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இம்மாநாட்டில், பால் கொள்முதல் விலையை ஒரு லிட்ட ருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.42 எனவும், எருமைப்பாலுக்கு ரூ.51 எனவும் உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதலை நாள்தோறும் 32 லட்சத்திலிருந்து ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். பாலுக்கான பாக்கித் தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய மாநில அரசு ரூ.300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். ஆவினில் கால்நடைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் வழங்க வேண்டும். கால்நடை தீவனங் கள் தரமானதாக 50 சதவிகித மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய சேலம் மாவட்ட தலைவராக சுப்ரமணி, மாவட்ட செயலாளராக பி.அரியாக் கவுண்டர், மாவட்ட பொருளாளராக ராமலிங்கம், துணைத் தலைவராக பொன்னுசாமி, மாவட்ட துணைச்செயலாள ராக செல்வகுமார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக, மோகன் நன்றி கூறினார்.