districts

img

மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் பகுதியில் மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் கூடுதலாக மழை நீர் வடிகால் கட்டுவது, கழிவு நீர் தொட்டி அமைத்து அதிவேக மோட்டார் பொருத்தி கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.